என்னாங்கடா இது.. ஆரியிடம் மட்டும் மொரட்டு கேள்வியா கேக்குறீங்க.. புரமோவால் கொதிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் ஆரியிடம் காலர் கேட்ட கேள்வியை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில், ஆரியிடம் பேசிய காலர், ரூல்ஸ், ரெகுலேஷன் என்று பேசுவது குறித்து கேட்டார்.

இதனால் மற்றவர்களுடன் ஆரியுடைய இணக்கமான சூழல் பாதிக்கப்படுவதையும் கூறினார். இதனைக் கேட்ட ஆரி, நான் இணக்கமாக இருக்க இங்கு வரவில்லை என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆரி வேற லெவல்

முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ரொம்ப கஷ்டபட்டு பிக்பாஸ் உள்ளே எதுக்கு வராங்க?.. குடும்பம் நடத்ததான்.. அட போங்கப்பா.. இந்த பாசம், வேசம் பிக்பாஸ் உள்ளே செட் ஆகாது.. ஆரி நீ வேற லெவல்... சூப்பர் ஆரி.. என பதிவிட்டுள்ளார்.

காப்பாத்தியிருப்பாங்களா?

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், 60 கேமரா 6 கோடி மக்கள் உங்களுக்கு தகுதி இருக்கா இல்லையா. தினம் கேள்வி கேட்டுக்கிட்டே தான் இருக்கோம்! ஆரி உள்ளேயிருந்தே நமக்கு காமிக்காத கேட்கமுடியாத கேள்விகள கேக்குறாரு! இது போட்டி இவருக்கு தகுதி இல்லனா இத்தனை வாட்டி மக்கள் காப்பாத்தியிருப்பாங்களா?? என்று கேட்டுள்ளார இந்த நெட்டிசன்.

மனிதன்கிற தகுதி போதும்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் கடமையும் கண்ணியமும் சமூகநீதியும் நியாயமும் தவறும் இடங்களில் கேள்விக்கேட்க மனிதன்கிற தகுதி போதும் அதுக்கு பெரிய கடவுளாகவோ இல்ல ஹீரோவாகவோ இருக்கனும்னு அவசியமில்ல.. ஆரி அர்ஜூனன் என்று பதிவிட்டுள்ளார்.

எடக்குமடக்கா..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், மிக்சர் ஆளுங்கிட்ட மிக்சர் தின்னுகிட்டே கேள்வி கேட்கிறானுங்க!.. நல்லா கேம் விளையாடுற ஆளுகிட்ட கொஞ்சம் எடக்குமடக்கா கேள்வி கேட்கிறானுக.. என்று விளாசியுள்ளார்.

பிக்பாஸின் கையாள்தான்

புரமோவில் ஆரியிடம் காலர் கேட்ட கேள்வியை பார்த்த இந்த நெட்டிசன், என்னாங்கடா இது.. ஆரியிடம் மட்டும் மொரட்டு கேள்வியா கேக்குறீங்க!... பிக்பாஸின் கையாள்தான் இந்த கேள்வியை கேட்கிறாரா? என்று பதிவிட்டுள்ளார்.

பயில்வானுக்கு ஒத்து ஊதி..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரிக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆண்டவரின் ஓரவஞ்சனை கேள்விகள், பயில்வானுக்கு ஒத்து ஊதும் பதில்கள்!.. இப்படிதான் போகுது இந்த நிகழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.

விஷத்தின் வீம்பு சிரிப்பு

ஆரியிடம் காலர் கேட்கும் கேள்வியை கேட்டு ரம்யா பாண்டியன் சிரிப்பதை பார்த்த இந்த நெட்டிசன், விசத்தின் வீம்பு சிரிப்பு என அவர் சிரிக்கும் போட்டோவை ஷேர் செய்மு பதிவிட்டுள்ளார்.

சரியான பதில்

இரண்டாவது புரமோவில் ஆரியிடம் காலர் கேட்கும் கேள்வியையும் அதற்கு ஆரி சொல்லும் பதிலை பார்த்த இந்த நெட்டிசன், சரியான கேள்வி.. சரியான பதில்.. என பாராட்டியுள்ளார்.

தனிமையில் இருந்தாலும் ஆதரவு

புரமோவில் காலரின் கேள்வியை பார்த்த இந்த நெட்டிசன், தனித்துவமான அம்பி.. அந்த படத்துல சமூகத்துக்கு நல்ல குணாதிசயம் உள்ள மனிதர் தானே! எனவே தான் மக்கள் புரிந்து கொண்டு தனிமையில் இருந்தாலும் ஆதரவு தருகின்றனர் என ஆரிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X