என்ன கருமம் புடிச்ச உடை இது: காயத்ரியை விளாசிய நெட்டிசன்ஸ்
சென்னை: காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்ஸ் அவரை விளாசியுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு காயத்ரி ரகுராம் ட்விட்டரில் என்ன வெளியிட்டாலும் நெட்டிசன்ஸ் கலாய்க்கிறார்கள். அதை பார்த்து கோபம் அடைந்த காயத்ரி தன்னை கலாய்ப்பவர்களுக்கு அட்வைஸ் செய்தார்.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
புகைப்படம்
காயத்ரி அழகான இடத்தில் நின்று எடுத்த புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் அணிந்திருக்கும் உடையால் நெட்டிசன்ஸ் அவரை விளாசியுள்ளனர்.
கருமம்
என்ன கருமம் பிடித்த உடையை அணிந்திருக்கிறீர்கள். தமிழ் பெண் என்பதை மறக்க வேண்டாம். ஒழுங்காக உடை அணியுங்கள் என்று நெட்டிசன்ஸ் காயத்ரிக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
திட்டு
உங்களுக்கு செட் ஆகும்படி உடை அணியுங்கள். இது போன்று உடை அணிந்து புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் என்று நெட்டிசன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளனர்.
க்யூட்
காயத்ரியின் புகைப்படத்தை பார்த்த பலர் திட்டினாலும் சிலரோ அவர் அழகாக கும்மென்று இருப்பதாக சிலர் ட்வீட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











