எல்லாத்திலயும் அவசரம்: மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட அவசரக்குடுக்கை ஆர்த்தி
சென்னை: கானக்குயில் பி. சுசிலா உயிருடன் இருக்கும்போது அவர் இறந்துவிட்டதாக ட்வீட்டிய நடிகை ஆர்த்தியை நெட்டிசன்ஸ் விளாசியுள்ளனர்.
கானக்குயில் பி. சுசிலா இறந்துவிட்டதாக ஒரு வதந்தி பரவியது. சுசிலா அமெரிக்காவில் நலமாக உள்ளார் வதந்தியை நம்ப வேண்டாம் என்று அவரது பி.ஆர்.ஓ. தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நடிகை ஆர்த்தி அவசரப்பட்டுவிட்டார்.

ட்வீட்
இசை உலகின் கானக்குயில், கின்னஸ் சாதனையாளர் பி.சுசிலா அவர்கள் இறைவனடி சேர்தல் #ஆழ்ந்த_இரங்கல். இதை சுசிலா அம்மாவின் உறவினர் அனுப்பினார் என்று ட்வீட்டினார் ஆர்த்தி.
தகவல்
அக்கா அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்துவதற்கு முன்பு எதையும் போஸ்ட் செய்யாதீங்க அக்கா என ரசிகர் ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
உறுதி
இது வதந்தின்னு சொல்றாங்க...எதுவாக இருந்தாலும் உறுதி செய்துவிட்டு போடுங்க ஓகே வா
அக்கா
சுசிலா உயிருடன் இருக்கிறார். இந்த ட்வீட்டை நீக்கிவிடுங்க அக்கா


Click it and Unblock the Notifications











