Don't Miss!
- News விடாமல் விரட்டும் எல்நினோ தாக்குதல்.. சென்னையில் மழை வருமா? அப்டேட் வந்தாச்சு
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாவ்னிக்காக வரிந்து கட்டி, ரகளை செய்யும் பிரியங்கா... வச்சு செய்யும் நெட்டிசன்கள்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 67 வது நாளான இன்று வீட்டில் உள்ளவர்களிடம் யார் காலை உணவு சமைக்க வேண்டும், ஏன் குளிக்காமல் இருக்கிறீர்கள் என அனைவரிடமும் சென்று கேள்வி கேட்டு, ஆர்டர் போடுகிறார் பாவ்னி. ஆனால் ஆண்கள் 9 பேர் பயன்படுத்த ஒரே ஒரு கழிவறை தான் உள்ளது என்பதால் புறப்படுவதற்கு நேரமாகும் என ராஜு, சிபி உள்ளிட்டோர் கூறுகிறார்கள்.
உங்களின் சிறு உதவி 5 மாத குழந்தை உயிர் பிழைக்க உதவும்
யார் பாத்திரம் கழுவது என பாவ்னி கேட்டுக் கொண்டிருக்கையில், அவரிடம் வரும் பிரியங்கா, நீ சமைத்துக் கொண்டிருப்பதால் தான் லேட்டாகிறது என பிரச்சனை செய்வார்கள். நீ என்பதால் எல்லோரும் பிரச்சனை செய்வார்கள் என கொளுத்தி போடுகிறார்.
“உசுப்பேத்துவது பிரியங்கா தான்“… ஆக்ரோஷமாக கோஷம் போட்ட தாமரை … அலறும் பிக் பாஸ் வீடு !
குறுக்கே பாய்ந்து கத்தும் பிரியங்கா
ஏன் குளிக்க வேண்டும் என அவசரப்படுத்துகிறீர்கள், கழிவறை காலியாக இல்லை என ராஜு, சிபி ஆகியோர் பாவ்னியிடம் பேசிக் கொண்டிருக்கையில் அவர்களை பேச விடாமல், பாவ்னி செல்வது எல்லாம் சரி என்பதை போலவும், மற்றவர்கள் கேள்வி கேட்பது, பேசுவது தவறு என்பதை போலவும் இடைவிடாமல் பேசி கத்துகிறார் பிரியங்கா.
அண்ணாச்சி – பிரியங்கா விவாதம்
அப்போது அனைவரிடமும் பொதுவாக பேசி, பிரச்சனையை முடித்து வைக்க வரும் இமான் அண்ணாச்சியிடமும், இதை எதற்காக சொன்னீர்கள். இதற்கு என்ன அர்த்தம். நான் என்ன செய்தேன் என சொல்லுங்கள் என கத்தி விவாதம் செய்கிறார். பாவ்னியிடம் யார் என்ன கருத்தை சொல்ல வந்தாலும் பிரியங்கா இடையில் புகுந்து கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து, பாவ்னிக்காக மற்றவர்களிடம் சண்டைக்கு போகிறார்.
என்னை குறி வைக்கிறீர்கள்
வேண்டுமென்றே என்னை குறி வைத்து அனைவரும் தாக்குகிறீர்கள் என பிரியங்கா குற்றம்சாட்டுகிறார். அண்ணாச்சி சமாதானமாக சொல்லவந்ததையும் கேட்க விடாமல் பிரியங்கா கத்தியதால், டென்சாகும் பாவ்னி, அண்ணாச்சியிடம் வாக்குவாதம் செய்கிறார். உனக்கு புரியவைப்பதற்குள் என்னை கீழ்ப்பாக்கத்திற்கு கொண்டு பேச வேண்டும் என நக்கலாக பாவ்னியிடம் சொல்கிறார் அண்ணாச்சி. அதையும் பிரச்சனையாக்குகிறார் பாவ்னி.
கொளுத்தி போட்ட பிரியங்கா
கொளுத்தி போட்டதுடன், எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்காதே என அண்ணாச்சி கூறியதையும் பிரச்சனையாக்குவதை பார்த்த நெட்டிசன்கள், எதற்காக பிரியங்கா சம்பந்தமே இல்லாமல் எல்லா விஷயத்திற்கும் கத்துகிறார். ஓவராக ரியாக்ட் செய்கிறார். பிரியங்காவை முதலில் வெளியே அனுப்புங்கள் என கூறி வருகின்றனர்.
எரிச்சலடையும் நெட்டிசன்கள்
கடந்த ஒரு வாரமாக பாவ்னியிடம் பிரியங்கா அதிகமாக நெருக்கம் காட்டுவதும், அவரை யாராவது ஏதாவது சொன்னால் முதல் ஆளாக பாவ்னிக்காக சண்டைக்கு போகிறார். ஏன் இந்த திடீர் பாசம். இது பிரியங்காவின் கேம் ஸ்டாட்டர்ஜியா. பிரியங்காவின் நடவடிக்கை எரிச்சலடைய வைக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் ஆர்வமே போகிறது என பலவிதங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.