Don't Miss!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- News "ஜெயலலிதாவை எப்படியெல்லாம் கேவலப்படுத்தியது திமுக.. நினைச்சு பாருங்க.." சேலத்தில் சீறிய மோடி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
புலிப் பார்வை, கத்தியை தடை செய்ய வலுப்பெறுகிறது கோரிக்கை! 50 அமைப்புகள் ஒன்று கூடுகின்றன!!
சென்னை: சர்ச்சைக்குரிய புலிப்பார்வை மற்றும் கத்தி ஆகிய திரைப்படங்களை தடை செய்யக் கோரும் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இத்திரைப்படங்களை தடை செய்யக் கோரி அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் நாளை சென்னையில் ஒன்று கூடுகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை சிறார் போராளியாக சித்தரிக்கிறது புலிப் பார்வை திரைப்படம்; இலங்கையில் தமிழினப் படுகொலையை நிகழ்த்திய ராஜபக்சேவின் உறவினர்களை அங்கமாகக் கொண்ட லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிறது கத்தி திரைப்படம்.
இந்த திரைப்படங்களை தடை செய்யக் கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. சென்னையில் சனிக்கிழமையன்று புலிப்பார்வை திரை இசை வெளியீட்டு விழாவில் சில கேள்விகளை எழுப்பியதற்காக மாணவர்களை நாம் தமிழர் இயக்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியினர் இரும்பு தடிகள் கொண்டு தாக்கி மண்டைகளை உடைத்தனர்.
இத்தாக்குதலை பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கண்டித்துள்ளன .இந்த நிலையில் புலிப்பார்வை, கத்தி திரைப்படங்களை தடை செய்யக் கோரி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என சுமார் 50க்கும் மேற்பட்ட இயக்கங்களின் நிர்வாகிகள் நாளை சென்னையில் ஒன்று கூடுகின்றனர்.
இந்த தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் செயல்படுகிறார்.