Don't Miss!
- News சென்னையில் பயங்கரம்.. பிரபல ‛பப்’ மேற்கூரையின் இடிந்து விழுந்தது.. 2 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஒரு நாள் இரவில் மாறியது சத்யராஜின் நைட் ஷோ
சென்னை: சத்யராஜ் நடிப்பில் உருவான நைட் ஷோ படத்தின் தலைப்பை ஒரு நாள் இரவில் என்று படக்குழுவினர் மாற்றி வைத்திருக்கிறார்கள்.
மலையாளத்தில் வெளியாகி பலரின் பாராட்டைப் பெற்ற ஷட்டர் படத்தின் ரீமேக் தான் இந்த நைட் ஷோ. சத்யராஜ், யூகி சேது, வருண், ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.
படத் தொகுப்பாளர் ஆண்டனி இந்தப் படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக இயக்குனராக மாறுகிறார். நவீன் இசையமைப்பில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் ஏ.அழ.விஜய் தனது தந்தை அழகப்பனுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை படக்குழுவினர் திடீரென்று படக்குழுவினர் மாற்றி வைத்திருக்கின்றனர். நைட் ஷோவில் இருந்து ஒரு நாள் இரவிலாக புரோமோஷன் பெற்றிருக்கிறது படத்தின் தலைப்பு.
படம் வெளியாக 2 வாரங்களே உள்ள நிலையில் ஏன் இந்த மாற்றம் என்று கேட்டால் எல்லாம் வரிவிலக்குதான் காரணம் என்று கூறுகின்றனர்.
தமிழில் தலைப்பு வைத்தால் தான் படங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும் என்ற காரணமும், படத்தின் தலைப்பு இன்னும் அழுத்தமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஒரு சிலரின் அறிவுறுத்தலும் தான் இதற்குக் காரணமாம்.
இப்படத்தின் திரைக்கதையை எழுதி தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி இயக்கியிருக்கும் ஆண்டனி, வழக்கம் போல தனது எடிட்டிங் பணிகளையும் படத்திற்கு ஏற்றவாறு கச்சிதமாக அளித்திருக்கிறாராம்.
விரைவில் வெளியாகும் இப்படம் மலையாளத்தைப் போலவே தமிழிலும் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரில் உள்ள பேய்ப்படங்களை ஒட்டுமொத்தமாக வாங்கி வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ் தான் இந்தப் படத்தின் விநியோக உரிமையையும் கைப்பற்றி இருக்கிறது.