Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லையைச் சொல்லும் நிசப்தம்!
நேற்று வெளியான நிசப்தம் படம் சத்தமின்றி ஏகப்பட்ட பாராட்டுகளைக் குவித்து வருகிறது. படத்தைப் பார்த்த அத்தனைப் பேரும், ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் பார்த்தாக வேண்டிய படம் எனப் பாராட்டுகிறார்கள்.
பெங்களூரில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மைக்கேல் அருண்.
பெங்களூரில் வசிக்கும் ஒரு தம்பதியின் எட்டு வயது மகளை ஒரு குடிகாரன் சீரழிக்கிறான். அந்த குழந்தை இந்த சமூகத்தில் படும் பாடு, அந்தக் குழந்தையின் பெற்றோர் படும் பாடுகளை இத்தனை அழுத்தமாக வேறு எந்தப் படமும் சொன்னதில்லை. குறிப்பாக தமிழில் இப்படி ஒரு வந்ததே இல்லை என்று பாராட்டும் அளவுக்கு சிறப்பாக வந்துள்ளது நிசப்தம் படம்.
பாதிக்கப்பட்ட சிறுமியாக சாதன்யா நடித்துள்ளார். அஜய் - அபிநயா ஜோடியாக நடித்துள்ளனர்.
பெரிய பரபரப்பு, விளம்பரங்கள் இல்லாமல் வெளியாகியுள்ள இந்தப் படம், மவுத் டாக் காரணமாக பிக்கப்பாகத் தொடங்கியுள்ளது.