Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நிதின் சத்யாவின் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் ஜெய்!
சென்னை : வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் ஜெய்யும், நடிகர் நிதின் சத்யாவும் நண்பர்களானார்கள். அந்தப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நட்பு இன்று வரை தொடர்கிறது.
வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி' படத்தில் இருவருமே இருந்தாலும், இப்போது தனி டீம் ஒன்றை உருவாக்கியுள்ளார் நடிகர் நிதின் சத்யா. இதுவரை நடிகராக மட்டுமே இருந்த நிதின் சத்யா, ஒரு படத்தைத் தயாரித்து அதில் ஹீரோவாக நடித்தார்.
அவர் தயாரித்த படம் ட்ராப் ஆனது. இந்நிலையில் தன்னுடைய நிதித் தேவைக்காக தற்போது ஜெய்யை ஹீரோவாக்கி புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறார் நிதின் சத்யா.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை வெங்கட்பிரபுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய பிச்சுமணி இயக்கி வருகிறார். 'ஜேக்கப்பிண்டே ஸ்வர்கராஜ்ஜியம்' மலையாளப் படத்தின் ஹீரோயின் ரெபா மோனிகா ஜான் இந்தப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி கலந்த படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு அரவிந்த் ஒளிப்பதிவு செய்கிறார். கால்வாசி படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் இப்படத்தை அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார் நிதின் சத்யா.