திருச்சிற்றம்பலம் படம் பற்றி நித்யா மேனன் சொன்ன சூப்பர் தகவல்
சென்னை : டைரக்டர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தனுஷ், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 18 ம் தேதி ரிலீசாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ், அனிருத் காம்போ இணைந்துள்ள படம் இதுவாகும்.இந்நிலையில் திருசு்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றுள்ளது.
இந்த விழாவில் அனிருத் மற்றும் தனுஷ் இணைந்து பாடிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த விழாவில் நடிகை நித்யா மேனன், வீல் சேரில் வந்து கலந்து கொண்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
படியில் இருந்து தவறி விழுந்ததால் நித்யா மேனனுக்கு காலில் அடிபட்டது. இதனால் அவர் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். மற்றொரு பட விழாவிலும் நித்யா மேனன் வீல் சேரில் வந்து தான் கலந்து கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் திருச்சிற்றம்பலம் படத்தில் பணியாற்றியது பற்றி நித்யா மேனன் தெரிவித்தார். அதில் அவர், திருச்சிற்றம்பலம் மிக அழகான கதை. நடுத்தர வர்க்கத்திற்கும் கீழான சூழலை புரிந்து கொண்டு தனுஷ் நடித்துள்ளார். எனக்கு அது அவ்வளவாக பழக்கமில்லை. எனக்கு இது வித்தியாசமாக இருந்தது.
தனுஷின் நடிப்பை உற்று கவனித்தது எனக்கு பயனுள்ளதாக இருந்தது. அவரது பேசுவது, நடிப்பதில் இருந்து நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். திருச்சிற்றம்பலம் குடும்ப சம்பந்தப்பட்ட கதை. 3 வெள்வேறு விதமான தலைமுறைகளை சேர்ந்த ஆண்களை பற்றிய கதை.
இந்த படத்தில் பாரதிராஜா, தனுஷின் தாத்தாவாக நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், தனுஷின் அப்பாவாக நடித்துள்ளார். இவர்கள் 3 பேரை பற்றியது தான் திருச்சிற்றம்பலம் படத்தின் கதை என தெரிவித்துள்ளார். இதனால் திருச்சிற்றம்பலம் படத்தின் கதை என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











