Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் போட்டோ: சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்
சென்னை:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளபோது நிவேதா பெத்துராஜ் மட்டும் எப்படி புகைப்படம் எடுத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு நாள் கூத்து படம் மூலம் நடிகையானவர் நிவேதா பெத்துராஜ். விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நிவேதா.
அவர் அண்மையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா மருத்துவமனையில் அனுமதி: காரணம்...
நிவேதா
கோவிலுக்குள் அவர் பிரசாதத்துடன் இருக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். மேலும் சில வீடியோக்களையும் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
செல்போன்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது நிவேதா மட்டும் எப்படி புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்தார் என்ற கேள்வி எழுந்தது.
இன்ஸ்டாகிராம்
நடிகை என்றால் செல்போன் எடுத்துச் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதிக்குமா என்று நெட்டிசன்கள் விளாசத் துவங்கினார்கள். இதை பார்த்த நிவேதா பிரச்சனை எதற்கு என்று நினைத்து கோவிலுக்குள் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை நீக்கிவிட்டார்.
நடவடிக்கை
தடையை மீறி செல்போனை எடுத்துச் சென்று புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்த நிவேதா பெத்துராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.