Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒஸ்திக்கு சிக்கலா? - தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்
தரணி இயக்கத்தில் சிம்பு - ரிச்சா நடிப்பில் உருவாகியுள்ள ஒஸ்தி படம், வரும் 8-ம் தேதி வெளியாகப்போவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்தப் படத்தை சன் டிவிக்கு விற்றிருப்பதால், திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர் தர மறுப்பதாக செய்தி வெளியானது.
இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்குகள் சங்கம், சென்னை திரையரங்கு உரிமையாளர் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து விடுத்துள்ள ஒரு அறிக்கையில், "ஒஸ்தி படத்துக்கு மேற்கண்ட அமைப்புகளில் உள்ள எவரும் எந்த வித தடையையும் விதிக்கவில்லை. எனவே அந்தப் படம் வெளியாவதில் சிக்கல் இல்லை," என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன், செயலாளர் பி எல் தேனப்பன், பொருளாளர் கலைப்புலி தாணு உள்ளிட்ட நிர்வாகிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.