Just In
- 2 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 3 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 6 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 7 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என் கல்யாணத்துக்கு கிப்ட் வேணாம்... உங்கள் கருணை போதும்! : இது சின்மயி கண்டிசன்
சென்னை: விரைவில் மணநாள் காண இருக்கின்ற பாடகி சின்மயி தனது திருமணத்திற்கு யாரும் அன்பளிப்பு வாங்கி வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.
பிரபல சினிமாப் பாடகி சின்மயி. இவருக்கும், நடிகர் ராகுல் ரவீந்தருக்கும் வரும் மே 6ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. மிகவும் எளிமையாக ஹோட்டல் ஒன்றில் திருமணத்தை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. தனது திருமண நாளில் வீண் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்த சின்மயி, மற்றவர்களுக்கும் உபயோகப் படும் மாதிரியாக எதையாவது செய்ய திட்டமிட்டார்.
அதன்படி, தனது திருமணத்திற்கு அழைப்பு விடுக்கும் போதே தயவு செய்து பரிசுப் பொருள் வாங்கி வர வேண்டாம் என தெரிவித்து விட்டாராம்.

ஆனால், பரிசுப் பொருள் வேண்டாம் என மறுத்த அதே சமயத்தில் மொய் எழுதக் கூடாது எனக் கூறவில்லை. காரணம் தனது திருமணத்திற்கு தர நினைக்கும் பணத்தை லடாக்கில் உள்ள 17 ஆயிரம் அடி பவுண்டேஷனுக்கு நிதியாக அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.
இது தொடர்பாக சின்மயியின் தாயார் கூறும் போது, 'இன்றைய விலைவாசியில் சாதாரண பூங்கொத்து என்பதன் விலையே ரூ 500ஐத் தொடுகிறது. மறுநாளே அந்தப் பூங்கொத்துக்கள் வாடி விடுகின்றன. இதனால் யாருக்கு என்ன பயன்?
அதனால் தான் சின்மயியின் திருமணத்தை உபயோகமாக இருக்குமாறு செய்ய வேண்டும் என யோசித்து இவ்வாறு திட்டமிட்டோம். இத்தகவலை திருமண அழைப்பிதழிலும் தெரிவித்துள்ளோம். நேரில் பார்ப்பவர்களிடமும் மறக்காமல் கூறி வருகிறோம்' என்றார்.