Don't Miss!
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- News எல்லா கோட்டையும் அழிங்க..என்னது எனக்கு ஓட்டு இல்லையா? ஷார்ப்பாக வந்து ஷாக் ஆன சூரி! என்னாச்சு?
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
படத்தில் தேசிய கீதம் வந்தால் எழுந்து நிற்க வேண்டாம்: உச்ச நீதிமன்றம்
டெல்லி: படத்தில் தேசிய கீதம் இசைக்கும் காட்சி வந்தால் எழுந்து நிற்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள திரையரங்குகளில் படம் துவங்குவதற்கு முன்பு தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆமீர் கானின் தங்கல் படத்தில் தேசிய கீதம் இசைக்கும் காட்சி வந்தபோது எழுந்து நிற்காதவர்கள் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது,
படம் துவங்குவதற்கு முன்பு திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். ஆனால் பட காட்சியில் அல்லது விளம்பரங்களில் தேசிய கீதம் இசைக்கப்பட்டால் எழுந்து நின்று மரியாதை செய்யத் தேவையைில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.