Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கபாலி பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது - வெங்கட் பிரபு !
சென்னை: ரஜினியின் கபாலி படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இதையொட்டி கபாலியின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை யாராலும் தடுக்க முடியாது என இயக்குநர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நாளை ரிலீசாகிறது ரஜினியின் கபாலி. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார். படம் ரிலீஸ் தேதி அறிவித்த நாள் முதலே கபாலியை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் ரஜினி ரசிகர்கள். கபாலி படத்தின் எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.
இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், படத்தின் 2 நிமிட இண்ட்ரோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் ரஜினி மலேசிய சிறையிலிருந்து வெளியே வரும் காட்சி உள்ளது. வெளியே வந்தவுடன் அவரிடம் 30 அப்பாவி தமிழர்கள் என்கவுண்டரில் சுடப்பட்ட செய்தியை சொல்கின்றனர்.
இந்த காட்சி தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சியில் எவ்வித ரசிகர்களின் சத்தமும் இல்லை, யாருக்கோ திரையிடப்பட்ட ப்ரிவியூ காட்சி தான் என்று கூறப்படுகிறது. இதை பகிர வேண்டாம் என படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கபாலி வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என இயக்குநர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் யார் எதை வெளியிட்டாலும், யாராலும் கபாலியின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை தடுக்க முடியாது என கூறியுள்ளார்.