Don't Miss!
- News 88 தொகுதிகள்.. இன்று 13 மாநிலத்தில் 2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா, கர்நாடகாவிலும் ஓட்டுப்பதிவு
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தமிழகத்தில் எந்தப் படப்பிடிப்பும் நடக்கவில்லை!- ஆர்கே செல்வமணி
ஃபெப்சி ஸ்ட்ரைக் காரணமாக தமிழகத்தில் எந்தப் படப்பிடிப்பும் நடக்கவில்லை என்று ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்துடனான மோதல் காரணமாக ஃபெப்சி அமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.
இதனால் 35 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் ரஜினியின் காலை, விஜய்யின் மெர்சல் படங்களும் அடங்கும்.
ஆனால் விஷால் படம் உள்ளிட்ட எட்டுப் படங்களின் படப்பிடிப்புகள் நடப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு ஆர்கே செல்வமணி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
"ஃபெப்சி ஸ்ட்ரைக் அறிவித்த பிறகு தமிழகத்தில் எங்கும் படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இது தெரியாமல் இங்கே படப்பிடிப்பு நடக்கிறது, அங்கே படப்பிடிப்பு நடக்கிறது என தவறான தகவல்களை சிலர் பரப்பிக் கொண்டுள்ளனர். பிரச்சினை தீரும் வரை படப்பிடிப்புகள் நடக்காது. தவறான செய்திகளை யாரும் பரப்பிவிட வேண்டாம்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.