Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'வந்து... விஜய் படத்துக்கு சிறப்பு அனுமதி இல்லைங்க... தயாரிப்பாளர் நலன் கருதி..!' - துரைராஜ்
Recommended Video
விஜய் படத்தின் ஷூட்டிங்குக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் தயாரிப்பாளர் சங்க கவுரவ செயலாளர் துரைராஜ். மாறாக தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்கா, மீதி இருந்த சில காட்சிகளை மட்டும் படமாக்க அனுமதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துரைராஜ் கூறுகையில், "16ம்தேதி முதல் படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஓரிரு நாள் படப்பிடிப்பு முடித்து செட்டைக் கலைக்க வேண்டிய நிலையில் அல்லது ஷெட்யூல் முடிக்க வேண்டிய சூழலில் உள்ள படங்களை மட்டும் ஆய்வு செய்து, மீதி ஷூட்டிங்கை முடித்துக் கொள்ள அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் சன் பிக்சர்ஸ் படம், சமுத்திரக்கனி இயக்கும் படம் மற்றும் இன்னொரு படத்துக்கு ஓரிரு நாட்கள் வேலை பாக்கி இருந்தன. அதை முடித்துவிட்டால் ஷெட்யூல் முடிந்துவிடும் என்பதால் இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் நலன் கருதியே இந்த அனுமதி. இது சிறப்பு அனுமதி எல்லாம் கிடையாது," என்றார்.