Don't Miss!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
பாகுபலி 2-ம் பாகத்தில் சூர்யா நடிக்கிறாரா? - எஸ்எஸ் ராஜமவுலி விளக்கம்
பாகுபலி இரண்டாம் பாகத்தில் சூர்யா நடிக்கப் போவதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் இயக்குநர் ராஜமவுலி.
‘நான் ஈ' படத்தை அடுத்து ராஜமௌலி இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘பாகுபலி'.
பெருமைக்குரிய படைப்பு
இப்படத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்திய திரையுலகின் பெருமைக்குரிய படைப்பாக இப்படம் கருதப்படுகிறது.
இரண்டாம் பாகம்
இரண்டு பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் முதல் பாகம் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ளது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் 45 சதவிகிதம் முடிந்துவிட்டது. வரும் 2016-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தப் படம் வெளியாகிவிடும்.
சூர்யா
இதன் இரண்டாம் பாகத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வந்தது. காரணம், இதன் முதல் பாகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் சூர்யா பிரதானமாகக் கலந்து கொண்டார். அதை வைத்து இப்படி ஒரு கதை பரவியது.
மறுப்பு
ஆனால் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
‘பாகுபலி' இரண்டாம் பாகத்தில் சூர்யா நடிக்கவில்லை. சூர்யா பற்றி வந்த செய்திகள் அனைத்தும் வதந்தியே என்று ராஜமௌலி," கூறியிருக்கிறார்.