'சோ' போன்று யாராலும் நாடகம் நடத்த முடியாது: சிவக்குமார் புகழ் அஞ்சலி
சென்னை: சோ போன்று யாராலும் நாடகம் நடத்த முடியாது என நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடக ஆசிரியர், நடிகர், பத்திரிகையாளர், அரசியல் ராஜகுரு என பன்முகத் திறமை கொண்ட சோ ராமசாமி காலமானார். அவருக்கு வயது 82. ஜெயலலிதாவுக்கு அரசியலில் ராஜகுருவாக இருந்தவர் சோ.

ஜெயலலிதா இறந்த இரண்டு நாட்களில் சோவும் காலமானார். சோவின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நடிகர் சிவக்குமார் தனது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தியுடன் சென்று சோவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேசிய அளவில் அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றவர் சோ. அவர் போன்று யாராலும் நாடகம் நடத்த முடியாது என்றார்.


Click it and Unblock the Notifications











