Don't Miss!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
என்னது சிம்பு படத்தைத் தடுக்கிறேனா.. சொல்றதுக்கு முன்ன மூளைய யூஸ் பண்ணுங்க! - உதயநிதி காட்டம்
சிம்பு படத்தை நான் தடுப்பதாகக் கூறுவது அபத்தமானது. அப்படிச் சொல்வதற்கு முன் மூளையைப் பயன்படுத்தவும் என்று காட்டமாகக் கூறியுள்ளார் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி.
சிம்பு நடித்து நான்கு ஆண்டுகளாக பல்வேறு சிக்கல்களில் சிக்கி, ஒரு வழியாக வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படம் வாலு.
இந்நிலையில் சிம்பு, ‘இன்னும் சிலர் ‘வாலு' படத்தை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் உங்களால் படத்தை தடுக்க முடியாது. என்னை விரும்பும் ரசிகர்கள் என்னிடம் இருக்கிறார்கள். மேலும் ஆண்டவன் அவர்களுக்கு பதில் சொல்வான்,' என்று கூறியிருந்தார்.
இதையடுத்து சிம்புவின் ரசிகர்கள் ‘வாலு' படத்தை உதயநிதி தடுப்பதாக கூறி ட்விட்டரில் ட்ரெண்டாக்கி பதிவு செய்து வந்தனர்.
இதையறிந்த உதயநிதி, ‘‘வாலு' படத்தை நான் ஏன் தடுக்கணும். ஏதாவது லாஜிக் இருக்கா? இப்படிச் சொல்லும் முன் யோசியுங்கள். நான் எந்த நடிகருக்கும் நடிகரின் ரசிகர்களுக்கும் எதிரி இல்லை. உங்கள் மூளையை உபயோகித்த பின்னர் கருத்துக்களை தெரிவியுங்கள்,'' என்று காட்டமாகக் கூறியுள்ளார்.