என்னது சிம்பு படத்தைத் தடுக்கிறேனா.. சொல்றதுக்கு முன்ன மூளைய யூஸ் பண்ணுங்க! - உதயநிதி காட்டம்
சிம்பு படத்தை நான் தடுப்பதாகக் கூறுவது அபத்தமானது. அப்படிச் சொல்வதற்கு முன் மூளையைப் பயன்படுத்தவும் என்று காட்டமாகக் கூறியுள்ளார் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி.
சிம்பு நடித்து நான்கு ஆண்டுகளாக பல்வேறு சிக்கல்களில் சிக்கி, ஒரு வழியாக வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படம் வாலு.

இந்நிலையில் சிம்பு, ‘இன்னும் சிலர் ‘வாலு' படத்தை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் உங்களால் படத்தை தடுக்க முடியாது. என்னை விரும்பும் ரசிகர்கள் என்னிடம் இருக்கிறார்கள். மேலும் ஆண்டவன் அவர்களுக்கு பதில் சொல்வான்,' என்று கூறியிருந்தார்.
இதையடுத்து சிம்புவின் ரசிகர்கள் ‘வாலு' படத்தை உதயநிதி தடுப்பதாக கூறி ட்விட்டரில் ட்ரெண்டாக்கி பதிவு செய்து வந்தனர்.
இதையறிந்த உதயநிதி, ‘‘வாலு' படத்தை நான் ஏன் தடுக்கணும். ஏதாவது லாஜிக் இருக்கா? இப்படிச் சொல்லும் முன் யோசியுங்கள். நான் எந்த நடிகருக்கும் நடிகரின் ரசிகர்களுக்கும் எதிரி இல்லை. உங்கள் மூளையை உபயோகித்த பின்னர் கருத்துக்களை தெரிவியுங்கள்,'' என்று காட்டமாகக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











