Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நான் குடிகாரியா?, எம்.எல்.ஏ. கமெண்ட் வொர்த்தே இல்லை: நடிகை ஹேமமாலினி
மும்பை: குடி பழக்கம் பற்றி பேசிய எம்.எல்.ஏ. குறித்து கருத்து தெரிவித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லையாம் நடிகை ஹேமமாலினி.
மகாராஷ்டிரா மாநில சுயேட்சை எம்.எல்.ஏ.வான பச்சு காது நாந்ததில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். விவசாயிகளின் தற்கொலை பற்றி பேசிய அவர் பாலிவுட் நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேம மாலினியை வம்புக்கு இழுத்திருந்தார்.
ஹேமாவின் குடிப்பழக்கம் பற்றி கூட்டத்தில் பேசினார்.
தற்கொலை
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள மதுப்பழக்கம் காரணம் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நடிகை ஹேமமாலினி தினமும் மது அருந்துகிறார், அவர் என்ன தற்கொலையா செய்து கொண்டார்? என்றார் எம்.எல்.ஏ.
ஹேமமாலினி
எம்.எல்.ஏ. பச்சு காது இப்படி பேசியிருக்கிறாரே என்று ஹேமமாலினியிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஹேமா கூறுகையில், யாரோ ஒருத்தர் பேசியது பற்றி கருத்து தெரிவித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அது வொர்த்தே இல்லை என்றார்.
அமைதி
வொர்த்தே இல்லாத விஷயம் பற்றி பேச வேண்டுமா என்று தான் அமைதியாக இருக்கிறேன். அவருக்கு பப்ளிசிட்டி தேவைப்படுவதால் குறுக்குவழியை தேர்வு செய்துள்ளார். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றார் ஹேமமாலினி.
ஜெயா பச்சன்
அரசியல் தலைவர்கள் நடிகைகளை வம்புக்கு இழுப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக 2012ம் ஆண்டு நாடாளுமன்ற அவையில் பேச எழுந்த எம்.பி.யும், நடிகையுமான ஜெயா பச்சனை பார்த்து அப்போதைய உள்துறை அமைச்சர் சுஷில் குமாபர் ஷிண்டே, சகோதரியே, முக்கியமான விஷயம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் இது சினிமா இல்லை என்றார். இதை கேட்ட ஜெயா பச்சன் அதிர்ச்சியில் அவர் இடத்தில் பேசாமல் அமர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!