Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
படம் பார்ப்பவர்களை விட நடிக்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாயிடுச்சி!- கவுண்டமணி
இன்றைக்கு படம் பார்ப்பவர்களை விட நடிக்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்று நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கூறினார்.
49 ஓவுக்குப் பிறகு கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.' இதில் சௌந்தர் ராஜா, ரித்விகா ஆகியோர் ஜோடியாக நடிக்கிறார்கள்.
கணபதி பாலமுருகன் இயக்குகிறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடந்தது.
விழாவில் கவுண்டமணி பேசுகையில், "இன்றைக்கு படங்கள் ஓடுவதில்லை. வசூலில்லை என்று பலரும் குறைபட்டுக் கொள்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இப்போது படம் பார்ப்பவர்களை விட நடிப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள். இதனால் படங்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. அத்தனை படங்களையும் திரையிடுவதற்கு தியேட்டர்கள் கிடைப்பது இல்லை. இதுதான் படங்கள் ஓடாததற்கு காரணம்.
நிறைய திரையரங்குகளில் பார்த்தால், படங்களின் ஒரு காட்சிதான் ஓடுகின்றன. திடீர்னு என்று அந்த காட்சியையும் நிறுத்திடறாங்க. இதுக்கெல்லாம் சில கட்டுப்பாடுகள் வேணும். அப்போதான் சினிமா ஆரோக்கியமா இருக்கும்.
‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' ஒரு நல்ல நகைச்சுவை படம். சாதிவிட்டு சாதி காதலிக்கும் ஜோடிகளைச் சேர்த்து வைக்கும் கதாபாத்திரம் எனக்கு. இப்போது சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட படம் என்பதால் நான் நடிக்க சம்மதித்தேன். காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் அரசியல் போன்ற அனைத்தும் இந்தப் படத்தில் இருக்கும்," என்றார்.