Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அரை நிர்வாண போஸ்டர்: சிரஞ்சீவி மகன், ஏமி ஜாக்சன் மீது வழக்கு
கர்ணூல்: யவடு படத்தின் போஸ்டர் ஆபசமாக இருந்ததாகக் கூறி ஒருவர் புகார் கொடுத்ததை அடுத்து ஹீரோ ராம்சரண் தேஜா, ஏமி ஜாக்சன் மற்றும் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போஸ்டரில் ஏமி ஜாக்சன் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா, ஸ்ருதி ஹாஸன், ஏமி ஜாக்சன் நடித்துள்ள தெலுங்கு படமான யவடு கடந்த 12ம் தேதி ரிலீஸானது. படத்தின் போஸ்டர்கள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் கர்ணூல் மாவட்டத்தைச் சேர்ந்த கே. நாகேந்திர பிரசாத் என்பவர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
யவடு பட போஸ்டர்கள் பார்க்க ஆபாசமாக உள்ளன. அதில் ஏமி ஜாக்சன் அரை நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அவரது புகாரின்பேரில் ராம்சரண் தேஜா, ஏமி ஜாக்சன் மற்றும் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.