twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரை நிர்வாண போஸ்டர்: சிரஞ்சீவி மகன், ஏமி ஜாக்சன் மீது வழக்கு

    By Siva
    |

    கர்ணூல்: யவடு படத்தின் போஸ்டர் ஆபசமாக இருந்ததாகக் கூறி ஒருவர் புகார் கொடுத்ததை அடுத்து ஹீரோ ராம்சரண் தேஜா, ஏமி ஜாக்சன் மற்றும் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போஸ்டரில் ஏமி ஜாக்சன் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா, ஸ்ருதி ஹாஸன், ஏமி ஜாக்சன் நடித்துள்ள தெலுங்கு படமான யவடு கடந்த 12ம் தேதி ரிலீஸானது. படத்தின் போஸ்டர்கள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

    இந்நிலையில் ஆந்திர மாநிலம் கர்ணூல் மாவட்டத்தைச் சேர்ந்த கே. நாகேந்திர பிரசாத் என்பவர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

    அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

    Obscene poster: Case against Yevadu hero, Amy Jackson

    யவடு பட போஸ்டர்கள் பார்க்க ஆபாசமாக உள்ளன. அதில் ஏமி ஜாக்சன் அரை நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    அவரது புகாரின்பேரில் ராம்சரண் தேஜா, ஏமி ஜாக்சன் மற்றும் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    English summary
    A case has been registered against Telugu actor Ram Charan Teja and 9 others on charge of alleged obscenity in film posters in Kurnool district of Andhra Pradesh, police said.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X