கம்போடியாவின் அங்கோர்வாட் கோயிலில் படமான முதல் சினிமா!
தமிழர்களின் கலைச் சிறப்பை உலகுக்கு பறை சாற்றும் கம்போடியாவின் அங்கோர்வாட் கோயிலில் படமாக்கப்பட்ட முதல் சினிமா என்ற பெருமையைப் பெற்றுள்ளது ஓம் சாந்தி ஓம்.
ஸ்ரீகாந்த் - நீலம உபாத்யாயா நடித்துள்ள 'ஓம் சாந்தி ஓம்' படம் ஆவி - பேய் சம்பந்தப்பட்ட கதை.
படத்தில் நாயகன் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நீலம் உபாத்யாயா நடிக்கிறார்.

'நான் கடவுள்' ராஜேந்திரன் ,ஜூனியர் பாலையா, ஆடுகளம் நரேன், மலையாள நடிகர் பைஜூ, வினோதினி வைத்தியநாதன் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
படத்தை இயக்கியுள்ளவர் டி.சூர்யபிரபாகர். இவர் எஸ். ஜே. சூரியா, ராஜேஷ்.எம் ஆகியோரிடம் பணிபுரிந்தவர்.ஒளிப்பதிவு கே.எம். பாஸ்கரன், இசை- விஜய் எபிநேசர்.
இந்தப் படம் முழுவதுமாக முடிந்து சென்சாருக்கு காட்டப்பட்டது. அவர்கள் படத்தைப் பார்த்து பாராட்டி, யு சான்று அளித்துள்ளனர். யு சான்று பெற்ற முதல் பேய் படம் ஓம் சாந்தி ஓம்தான்.
இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக கம்போடியா அங்கோர்வாட் கோயிலில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். இந்த கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











