Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பீப் பாய்ஸ் மீது மேலும் ஒரு வழக்கு!
அனிருத்தை இசையமைப்பாளர் என்றோ, சிம்புவை நடிகர் என்றோ இனி குறிப்பிட வேண்டிய அவசியத்தை அவர்களே வைக்கவில்லை. பீப் பாய்ஸ் என்றால் உலகத்துக்கே தெரியும்!
இந்த பீப் பாய்ஸ் விவகாரம் கொஞ்சம் அடங்கியமாதிரி தெரிந்த நிலையில், இப்போது மீண்டும் ஒரு வழக்கு இருவர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தூத்துக்குடியில்.
சிம்புவும் அனிருத்தும் பீப் பாடல் என்ற பெயரில் ஒரு கண்றாவிப் பாடலை வெளியிட்டதும் ஏக கண்டனங்கள், ஏகப்பட்ட வழக்குகள்.
சாதிச் சாயம்
பலரும் ஓயாமல் இந்த வழக்குகள் பற்றியே பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென இந்த வழக்குகளுக்கு சாதிச் சாயம் பூச ஆரம்பித்தனர். விளைவு, சிம்பு மீது பாமக சார்பில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போடப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன.
தூத்துக்குடியில்
இந்தநிலையில் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது ஆபாச பாடல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் சக்திகனி, தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார்.
வழக்கு
அதில் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசமாக சித்தரிக்கும் வகையிலும் வார்த்தைகளை பயன்படுத்தி பாடல் பாடிய நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
உத்தரவு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி காமராஜ், சிம்பு, அனிருத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மார்ச் மாதம் 7-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தூத்துக்குடி மத்திய பாகம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
வழக்குப் பதிவு
இதையடுத்து மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், நடிகர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது 509 (பெண்களை இழிவுபடுத்துதல்), 67 (இன்டர்நெட்டில் வெளியிட்டு குற்றம் சுமத்துதல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!