Don't Miss!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத 'ஐ'- ஒன்இந்தியா வாசகர்கள் கருத்து!
சென்னை: 'ஐ' திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும், இயக்குநர் ஷங்கர் சொதப்பிவிட்டார் என்றும் 41 சதவீதம் ஒன்இந்தியா வாசகர்கள், கூறியுள்ள நிலையில், அருமையான படம் என்று 26.87 சதவீதம் பேர்தான் கூறியுள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளியான பிரமாண்ட திரைப்படம் ஐ. பல ஆண்டுகால உழைப்புக்கு பிறகு இப்படம், கடந்த 14ம்தேதி திரைக்கு வந்தது.
படத்தில் பிரமாண்டத்திற்கு பஞ்சமில்லை என்றபோதும், ஷங்கரின் வழக்கமான இயக்குநர் 'டச்' இல்லை என்று ரசிகர்கள் பலரும் குறைபட்டுக் கொண்டனர். சமூக கருத்துள்ள படங்களில் ஷங்கர் பின்னிபெடலெடுப்பார் என்றும், காதல் கதைக்களம் என்றால் ஷங்கர் தடுமாறுவது வழக்கம்தான் என்றும் சில நடுநிலை ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
இன்னும் சில ரசிகர்களோ, ஷங்கர் படமா இது, ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா இப்படி உள்ளது என்று கருத்துக்களை ஆவேசமாக கூறிவருகின்றனர். சரி.. ஒன் இந்தியா வாசகர்களிடமே கருத்தை கேட்டுவிடுவோமே, அவர்களுக்குதான் உலக ஞானம் அதிகமாயிற்றே என்று நினைத்து, கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
ஐ திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. இதுவரை, 34 ஆயிரத்து 955 பேர் வாக்களித்துள்ளனர். அதில் மீண்டும், மீண்டும் பார்க்க வேண்டிய சூப்பர் படம் என்று 9393 பேர் தெரிவித்துள்ளனர். இது 26.87 சதவீதம் வாக்குகளாகும்.
எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று 9061 பேர் அதாவது, 25.92 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இது கிட்டத்தட்ட படம் பிடித்திருக்கிறது என்று சொல்வோரை சமன் செய்யும் அளவுக்கு உள்ளது. ஒரு பிரமாண்ட படத்திற்கு, அதுவும் ஷங்கர் இயக்கிய படத்திற்கு எதிராக இவ்வளவு பேர் வாக்களித்திருப்பதே படத்தின் சரிவை காண்பிப்பதாக உள்ளது.
இதில் இன்னும் சிலர், ஷங்கர் சொதப்பி விட்டார் என்று கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 5423. சதவீதத்தில் இது 15.51.
அதேநேரம் படத்தை பார்க்கவில்லை என்று சொன்னோர் எண்ணிக்கை 11,078 பேராகும். மொத்த 'வாக்காளர்களில்' இது 31.69 சதவீதமாகும்.
ஆக.. எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சொன்னோரும், ஷங்கர் சொதப்பிவிட்டார் என்று சொன்னோரும், ஐ படத்தின்மீதான அதிருப்தியில் உள்ளவர்கள் என்பது உறுதியாகிறது. இவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை, சுமார் 41 சதவீதமாகும். படம் பிடித்திருக்கிறது என்று சொன்னவர்கள் வெறும் 26.87 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!