Just In
- 3 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 4 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 4 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 4 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
தளவனூர் தடுப்பணை உடைந்தது-பொன்முடி தலைமையில் திமுக திடீர் போராட்டம்- அமைச்சர் சிவி சண்முகம் விளக்கம்
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Automobiles
ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்?! க்ரெட்டாவின் ஆதிக்கத்தை உடைக்குமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'பிக்பாஸ்காரன் வீட்டினிலே, பாம்புகள் பல்லிகள் நடுவினிலே.. அஞ்சாமலிருக்கும் நம்ம ஓவியா!'
காலையிலே ஒரு போன், அதில் கேட்டவர் இப்படித்தான் கேட்டார்
"அண்ணே, கலைஞர் பற்றி ஒன்று கேட்கணும்னே"
"என்னய்யா?"
"கலைஞருக்கு ஒரு பாட்டு உண்டே, திமுக மேடைகளில் எல்லாம் போடுவாங்களே என்னண்ணே?"
"நிறைய பாட்டு உண்டு எது?"
"ஏதோ பாம்பு பல்லின்னு வரும்ல அண்ணே?"
ஆமா, "பாளையங்கோட்டை சிறையினிலே, பாம்புகள் பல்லிகள் நடுவினிலே, அஞ்சாமல் இருந்தது யாரு, அந்த கலைஞரின் புகழினை பாடு"
"அதேதாண்ணே அதேதான், தேங்க்ஸ்ணே"

"சரி. இப்பொ இந்தபாட்டு எதுக்கு?"
"அண்ணே, அதே பாடலை,
"பிக்பாஸ்காரன் வீட்டினிலே,
பாம்புகள் பல்லிகள் நடுவினிலே,
அஞ்சாமல் இருந்தது யாரு,
அந்த ஓவியா புகழை பாடு.."
இப்படி மாத்தி பாடி ஆல்பம் வெளியிடபோறோம்ணே... இந்த பாட்டை படிச்சது யாருண்ணேண்?"
"நாகூர் ஹனிபா பாடினார், நீங்க இப்படி வருவீங்கண்ணு தெரிஞ்சி செத்துட்டார்"
"அப்படியாண்ணேன்... அப்போ இருக்கிறதுல யாரையாவது வச்சி பாடி ரெக்கார்டு பண்ணிரலாம்ணே"
"ஏண்டா ஏன்?"
"விடக் கூடாதுண்ணே, ஓவியா அழுதிருச்சிண்ணேன், அந்த காயத்திரி, சினேகன், சக்தி எல்லாம் பாம்புண்ணே, அந்த ஜூலி, வையாபுரி எல்லாம் பல்லிண்ணே, இந்த பாட்டை ஆல்பமாக்கி பெரிய ஆதரவ திரட்டபோறோம்ணே, பச்ச மண்ணுண்ணே அவ, காப்பாத்தணும்ணே, நன்றிண்ணே"
எல்லாம் ஓவியா மாயம்!
- ஸ்டான்லி ராஜன்