Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பாயும் புலி ஓசையே பாகுபலி மாதிரி இருக்கிறது! - லிங்குசாமி
பாயும் புலி என்ற தலைப்பின் ஓசையே பாகுபலி மாதிரி ஒலிக்கிறது என்றார் இயக்குநர் லிங்குசாமி.
பாயும் புலி படத்தின் சிலுக்கு மரமே என்ற சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டுப் பேசிய லிங்குசாமி கூறுகையில், "பாயும்புலியின் ஓசையே பாகுபலி என்று கேட்பது போல் தெரிகிறது. அதே போல வெற்றியும் தொடரட்டும்.
விஷால் என் கதாநாயகன். அவர் நடிப்பில் 'சண்டக்கோழி 2' விரைவில் ஆரம்பமாக உள்ளது. செப்டம்பர் 9ல் படம் தொடங்குகிறது,'' என்றார்.
ஏமாத்திட்டாரே சுசீந்திரன்..
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பேசும் போது, ''நியூசிலாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு என்றார் சுசீந்திரன். ஆனால் இங்கேயே முடித்து எங்களை ஏமாற்றிவிட்டார். கம்போடியா போகாமல் காரைக்குடியிலேயே முடித்துவிட்டார்," என்றார்.
சுசீந்திரன்
இயக்குநர் சுசீந்திரன் பேசும் போது, ''நான் மகான் அல்ல' படத்துக்குப் பிறகு எனக்குப் பிடித்த படம் என் மனசுக்கு நெருக்கமான படம் இது. மதன் சார் இந்தப்படம் பிரமாண்டமாக வருவதற்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார், " என்றார்.
டி இமான்
டி.இமான் பேசுகையில், ''இது எனக்கு ஸ்பெஷலான படம்.' பாண்டியநாடு', 'ஜீவா' வுக்குப் பிறகு சுசீயுடன் இணையும் 3 வதுபடம்.வேந்தர் மூவிசுக்கான முதல்படம். இதில் 5 பாடல்களை அருமையாக வைரமுத்து எழுதியுள்ளார்,'' என்றார்.
ஜெயப்பிரகாஷ்
ஜெயபிரகாஷ்பேசும் போது, "விஷால் படத்தில் நான் ஒரு ஓரமாகக் கூட நிற்பேன். சுசீயும் அப்படி வாய்ப்பு கொடுப்பார். இஷ்டப்பட்டு வேலை பார்த்தோம். எனவே இப்படத்தில் கஷ்டம் தெரியவில்லை,'' என்றார்.
விழாவில் கலை இயக்குநர் ராஜீவன், நடிகர் சூரி, இயக்குநர்கள் பாண்டிராஜ்,திரு, வி.மியூசிக் ஐஸ்வர்யா, உடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் ஆகியோரும் கலந்து வாழ்த்தினார்ககள்.
-
சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?
-
சீக்கிரமே திருமணம் ஆகப்போகுது.. திடீரென தனுஷுடன் வரலட்சுமி சரத்குமார்.. எங்கே போயிருக்காரு பாருங்க!