Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சர்ச்சை எதிரொலி.. பத்மாவதி படம் வெளியிடும் தேதி தள்ளிவைப்பு
தொடர் சர்ச்சைகளை அடுத்து பத்மாவதி படம் வெளியாகும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மும்பை: தொடர் சர்ச்சைகளை அடுத்து பத்மாவதி படம் வெளியாகும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்த வரலாற்றுத் திரைப்படமான பத்மாவதிக்கு பெரிய எதிர்ப்பு நிலவி வருகிறது. ராஜஸ்தானின் சித்தூர் அரசி பத்மாவதி குறித்த வரலாற்றுப் படம் என்பதால் ராஜஸ்தானை சேர்ந்த பாஜக கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்
இந்தப்படம் வரலாற்றை தவறாக சித்தரிப்பதாகக் கூறி ராஜ்புத் கார்னி சேவா, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. மேலும் அந்த படத்த்தின் போஸ்டர்கள் கூட தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இந்தப்படம் திட்டமிடப்பட்டுள்ள டிசம்பர் 1ம் தேதி வெளியானால் மாநிலத்தில் பெரும் போராட்டம் உருவாக வாய்ப்பு இருப்பதாக உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வெளியிட்டு தேதி தள்ளிவைக்கப்ட்டு இருக்கிறது. படம் கண்டிப்பாக டிசம்பர் 1ம் தேதி வெளியாகாது என்று படக்குழு கூறியுள்ளது. வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.