Don't Miss!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- News மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்கு அளிக்கலாம்.. எப்படி?
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
பாஜக எதிர்ப்பால் பத்மாவதி படம் தள்ளி வைப்பு!
மும்பை: பத்மாவதி படத்துக்கு தொடர்ந்து பாஜகவினர் கடுமையாக எதிர்த்து வருவதால் டிசம்பர் 1-ம் தேதி அந்தப் படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடித்துள்ள படம் பத்மாவதி. இந்தப் படத்தில் ராஜஸ்தானின் மேவார் பகுதியை ஆண்ட ராணி பத்மாவதியை தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி பாஜக, இந்துத்துவா அமைப்புகள் படத்துக்கு கடுமையான எதிர்ப்பாக் காட்டி வருகின்றன.
உபி அரசு அதிகாரப்பூர்வமாகவே இந்தப் படத்தை திரையிட விட மாட்டோம் என அறிவித்துள்ளது.
சென்சார் குழு படத்துக்கு முதலில் யுஏ சான்று வழங்குவதாகக் கூறியது. ஆனால் இப்போது சான்று வழங்க முடியாது என மறுத்துள்ளது. விண்ணப்பத்தில் குறைகள் உள்ளன, சரியாக செய்து மீண்டும் விண்ணப்பியுங்கள் என்று கூறியுள்ளது.
இப்படி பல்வேறு பக்கங்களிலிருந்தும் நெருக்கடிகள், பிரச்சினைகள் வந்துள்ளதால் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக படத்தைத் தயாரித்துள்ள வயாகாம் 18 அறிவித்துள்ளது.
ரூ 190 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள படம் பத்மாவதி. ரிலீஸ் தேதி தள்ளிப் போவதால், தயாரிப்பாளருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.