Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிம்பு-நயன் இடையே பழைய 'கெமிஸ்ட்ரி'யை கொண்டு வர பாண்டிராஜ் முயற்சி
வல்லவன் படத்தில் நடித்தபோது காதலில் விழுந்த சிம்புவும், நயன்தாராவும் அதன் பிறகு பிரிந்துவிட்டனர். காதல் முறிவுக்கு பிறகு அவர்கள் ஒன்றாக சேர்ந்து நடிக்கவில்லை. இந்நிலையில் தான் சிம்பு பாண்டிராஜ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
சிம்புவுக்கு ஏற்ற ஜோடியை அல்ல தேவதையை ஊரெல்லாம் தேடிய பாண்டிராஜ் இறுதியில் நயன்தாராவை தேர்வு செய்தார். யாரும் எதிர்பாரா வண்ணம் நயன்தாராவும் சிம்புவுடன் நடிக்க சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து சிம்பு-நயன் நடிக்கும் காட்சிகளை படமாக்கும் வேலைகளும் துவங்கிவிட்டன.
வல்லவன் படத்தில் சிம்பு, நயன்தாரா இடையேயான கெமிஸ்ட்ரி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் அதே கெமிஸ்ட்ரியை தன்னுடைய படத்திலும் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் பாண்டிராஜ்.
7 ஆண்டுகள் கழித்து முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்துள்ளதால் பாண்டிராஜ் படத்தின் மீது தான் பலரின் கண்களும் உள்ளன.