Don't Miss!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கமலின் பாபநாசம் படத்தால் அருள்நிதி படத்துக்கு வந்த சிக்கல்!
கமலின் பாபநாசம் படம் ஜூலை 3-ம் தேதி வெளியாவதால், பிற படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அன்று வெளியாகவிருந்த அருள்நிதி நடித்த நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படம் தள்ளிப் போய்விட்டது.
அறிமுக இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், சிங்கம்புலி, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
வருகிற ஜூலை 3-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாபநாசம்' படம் ஜூலை 3-ந் தேதி வெளியிடுவதாக திடீரென அறிவித்தனர். அன்றைய தினத்தில் விவேக் நாயகனாக நடித்த பாலக்காட்டு மாதவன் உள்ளிட்ட மேலும் சில படங்களும் வெளிவருகின்றன.
இதனால், ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்' படத்தின் ரீலீஸ் தேதியை இப்படத்தை வெளியிடும் ஜே.எஸ்.கே நிறுவனம் ஒத்திவைத்துள்ளது. இதுகுறித்து ஜே.எஸ்.கே நிறுவனத்தின் நிர்வாகி சதீஷ்குமார் கூறும்போது, எங்கள் நிறுவனம் சார்பாக ஜூலை 3-ம் தேதி வெளியாக இருந்த ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்' திரைப்படம் தற்போது கமல் நடித்த ‘‘பாபநாசம்' திரைப்படம் அதே தேதியில் வெளியாவதால், எங்களது விநியோஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜூலை 31-ந் தேதி படத்தை வெளியிடப் போகிறோம், தெரிவித்துள்ளார்.