கூவம் சுத்தமாச்சு - But ஊரே கூவமாச்சு ! - பார்த்திபனின் மழைக் கவிதை இது
மழை... ஆண்டு முழுக்க சென்னை மக்களின் கனவாக இருந்த மழை, இன்று சாபமாக மாறிவிட்டது.
சென்னை மாநகரில் வெள்ளத்துக்கு நடுவில் வீடுகள். முறையான வடிகால் வசதி இல்லாமல் இஷ்டத்துக்கும் கட்டப்பட்ட கட்டடங்களே இதற்கு மூல காரணம்.

இந்த மாமழையைப் பற்றி நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் எழுதியிருக்கும் சிலவரிக் கவிதை இது...
நீரோடைகளாகும்
தார் சாலைகள் !
தார்மீக பொறுப்பை
யார் ஏற்பார்களாம் ?
(இது ஆந்திராவில்
நடந்ததாக குறிப்பு )
நம்மூரில் மழையால்
கூவம் சுத்தமாச்சு - but
ஊரே கூவமாச்சு !
Comments


Click it and Unblock the Notifications