Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பருத்தி பாக்கி-அமீர் புலம்பல்
பருத்தி வீரன் மெகா ஹிட் படமாகி வசூலைக் குவித்துள்ள நிலையில், அப்படத்துக்காக தனக்கு தர வேண்டிய 2 கோடி ரூபாய் பாக்கித் தொகையை வசூலிக்க முடியாமல் வருத்தத்தில் உள்ளாராம் இயக்குநர் அமீர்.
கார்த்தியை வைத்து அமீர் பருத்தி வீரனை ஆரம்பித்தபோது வேறு ஒருவர்தான் தயாரிப்பாளராக இருந்தார். படத்தின் பட்ஜெட் எகிற ஆரம்பித்ததால் படத்தை பாதியில் விட்டு விட முடிவு செய்தார்.ஆனால் படத்தை கைவிட அமீருக்கு உடன்பாடில்லை. இதையடுத்து அவரே சொந்தக் காசைப் போட்டு படத்தை எடுத்து முடித்தார். ஆனால் படத்தை அதிக விலைக்கு அவர் விற்க நினைத்தபோது யாரும் வாங்க முன்வரவில்லை.
இதனால் பருத்தி வீரன் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டது. இந்த சமயத்தில், படத்தை சிவக்குமார் பார்த்து விட்டு தனது உறவினர் ஞானவேல் ராஜாவிடம் விற்று விடுமாறு அமீரைக் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் கூறிய விலையில் அமீருக்குத் திருப்தி வரவில்லை.
ஆனால் அரசியல் குறுக்கீடு ஏற்பட்டு படத்தை ஞானவேல்ராஜாவிடம் அமீர் விற்கும் நிலை ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் அவர்கள் சொன்ன விலைக்கு படத்தை விற்று விட்டு ஒதுங்கிக் கொண்டார் அமீர்.
அதேசமயம், தயாரிப்பாளர் கவுன்சிலில் புகாரும் கொடுத்தார். பஞ்சாயத்துக் கூட்டிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன், படத்தை ரிலீஸ் செய்ய வழி விடுமாறும், படம் ரிலீஸான பின்னர் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் எனவும் அமீருக்கு அறிவுறுத்தினார்.
அமீரும் ஒத்துக் கொள்ள படமும் ரிலீஸானது, வரலாறு படைத்தது, வசூலையும் அள்ளி விட்டது. 100வது நாளையும் நெருங்கி விட்டது. ஆனால் சிவக்குமார் தரப்பு சொன்னபடி தனக்குத் தர வேண்டிய பாக்கித் தொகையை (ரூ.2 கோடி என்கிறார்கள்) இன்னும் தராமல் இருப்பதால் அமீர் வருத்தத்தில் இருக்கிறாராம்.
பாக்கித் தொகையை தரும்படி பலமுறை கேட்டும் சரியான பதில் இல்லையாம். தயாரிப்பாளர் கவுன்சிலும் இதுகுறித்து கண்டு கொள்ளாமல் இருக்கிறதாம்.
பருத்தியை கொள்முதல் செய்தவர்கள் உரிய தொகையை தராமல் இருப்பது நியாயமா என்று நெருங்கியவர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறாராம் உற்பத்தி செய்த அமீர்!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!