Just In
- 38 min ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 52 min ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 58 min ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
- 3 hrs ago
அக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்!
Don't Miss!
- News
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்... 2 தொகுதியில் போட்டி... மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு
- Sports
ரெய்னாவுக்கு இந்த நிலைமையா? சிஎஸ்கே மட்டுமில்லை.. மற்ற அணிகளும் ஏலம் கேட்க தயக்கம்.. பரபர தகவல்!
- Lifestyle
நீங்க தினமும் குடிக்கிற இந்த பானங்களாலதான் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையே வருதாம் தெரியுமா?
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
"ரோசனை மஞ்சுவாண்டு"தான் செந்தில்குமாரி என்ன பண்ணிட்டிருக்காங்க தெரியுமா?
சென்னை : 'பசங்க' படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர் செந்தில்குமாரி. அந்தப் படத்திற்குப் பிறகு 'பசங்க செந்தி' என்றே அழைக்கப்பட்டார்.
தனது கீச்சுக் குரல் யதார்த்த நடிப்பால் தொடர்ந்து அம்மா, அண்ணி கேரக்டர்களில் நடித்து வருகிறார். தற்போது 'மெர்சல்', 'மதுர வீரன்', 'சர்வர் சுந்தரம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன.
இந்நிலையில், சின்னத்திரை தொலைக்காட்சித் தொடரில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் செந்தி. விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி தொடரில் செல்லமான அம்மா மற்றும் மாமியாராக நடித்து வருகிறார்.

சினிமாவிலும் பிசிதான்
டி.வி சீரியலில் நடிப்பது பற்றி, "இப்போதும் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சரவணன் மீனாட்சி தொடர் எனக்கு மிகவும் பிடிக்கும்.

வற்புறுத்திக் கொண்டே இருந்தார்
அதன் இயக்குனருக்கு போன் செய்து ஒரு நாள் பாராட்டினேன். அதிலிருந்து அவரும் நீங்களும் நடிங்களேன் என்ற வற்புறுத்திக் கொண்டே இருந்தார், மறுத்து வந்தேன்.

பார்ப்போமே
தொடர் வற்புறுத்தலால் நடித்துத்தான் பார்ப்போமே என்று நடிக்க ஆரம்பித்து விட்டேன். சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை.

சினிமாதான் முக்கியம்
ஆனால் எனக்கு சினிமாதான் முக்கியம். சரவணன் மீனாட்சிக்குப் பிறகு தொடர்ந்து சீரியலில் நடிக்கும் ஐடியா எதுவும் இப்போதைக்கு இல்லை" என்கிறார் செந்தி.