Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ஷூட்டிங் ஸ்பாட்டில் காமெடி நடிகருக்கு பளார் விட்ட 'ரியல்' பவர்ஸ்டார்
ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் சர்தார் கப்பார் சிங் படப்பிடிப்பின்போது நகைச்சுவை நடிகர் ஷங்கரை கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டாராம்.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தயாரித்து நடித்துள்ள படம் சர்தார் கப்பார் சிங். கே. எஸ். ரவீந்திரா இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பவன் கல்யாண் டென்ஷனாகி நகைச்சுவை நடிகர் ஷங்கரை அறைந்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகின.
படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் கொண்டாடும் வகையில் நடந்து கொள்ளும் பவன் ஒரு நடிகரை அறைந்துவிட்டார் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
ஷங்கர் படப்பிடிப்பு தளத்திற்கு லேட்டாக வந்ததும், அக்கறை இன்றி நடந்து கொண்டதும் தான் பவன் அவரை அறைய காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,
ஷங்கர் படப்பிடிப்பு தளத்தில் ஓவராக சீன் போட்டுக் கொண்டிருந்தார். மேலும் இயக்குனரை கிண்டல் செய்து படப்பிடிப்புக்கு இடையூறாக இருந்தார். இதனால் அவருக்கு பாடம் கற்பிக்க பவன் அவரை கன்னத்தில் அறைந்தார்.
பின்னர் தனது செயலுக்காக அவர் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்டார் என்றார்.
நான் பவன் கல்யாணின் தீவிர ரசிகனாக்கும். எதிர்காலத்தில் அவருக்கு கோவில் கட்டுவதே எனது லட்சியம் என்று ஷங்கர் பலமுறை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.