Don't Miss!
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Technology சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
என்னடா பொன்னியின் செல்வனுக்கு வந்த சோதனை... இப்படியா போய் சிக்குவாங்க ?
ஐதராபாத் : மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் ஷுட்டிங் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. முதலில் வெளிநாட்டில் துவங்கப்பட்ட படத்தின் ஷுட்டிங், லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு துவங்கப்பட்ட ஷுட்டிங் ஐதராபாத், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்டது. ஐதராபாத்தில் நீண்ட நாட்களாக நடத்தப்பட்ட ஷுட்டிங்கில் முக்கியமான காட்சிகள் பலவும் எடுக்கப்பட்டுள்ளது.
கோட்டைசுவருக்கு மத்தியில் இரண்டு ஜாம்பவான்கள்… பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ !
மத்திய பிரதேச ஷுட்டிங்
கடந்த சில நாட்களாக மத்திய பிரதேசத்தில் மகேஷ்வர் பகுதியில் படு சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ் ராஜ் ஆகியோரை வைத்து இங்கு ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
நாங்க முடிச்சுட்டோம்
இவர்களில் ஜெயம் ரவி, விக்ரம் இருவரும் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் தங்களின் போர்ஷனை முடித்து விட்டதாக சமீபத்தில் சோஷியல் மீடியாவில் அறிவித்தனர். இவர்களைத் தொடர்ந்து மற்றவர்களும் தங்கள் போர்ஷனை முடிக்கும் வேலைகளில் இறுதிக்கட்டத்தில் உள்ளனர்.
புதிதாக முளைத்த சிக்கல்
ஏற்கனவே அடுத்தடுத்து ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்கள் வெளியாவது நடிகர்களின் கேரக்டர்கள் வெளியாவது ஆகியவை தொடர்ந்து வருவதால் என்ன செய்வதென தெரியாமல் மணிரத்னமும், படக்குழுவும் தலை சுற்றி போய் உள்ளனர். இதற்கிடையில் பொன்னியின் படத்திற்கு மற்றொரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது எப்போ நடந்தது
லேட்டஸ்ட் தகவலின்படி, ஐதராபாத்தில் பொன்னியின் செல்வன் ஷுட்டிங் நடத்தப்பட்ட போது, குதிரைகளை வைத்து போர் காட்சி ஒன்றை படமாக்கி உள்ளனர். அப்போது நடந்த விபத்தில் எதிர்பாராத விதமாக குதிரை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த தகவல் தற்போது தான் வெளியில் கசிந்துள்ளது.
வழக்கு தொடர்ந்த பெட்டா
இந்த விபத்து பற்றி அறிந்த பெட்டா இந்தியா அமைப்பு, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மீது போலீசில் புகார் அளித்ததுடன், வழக்கும் தொடர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
இதைத் தொடர்ந்து இந்திய விலங்குகள் நல வாரியம், ஐதராபாத் மாவட்ட கலெக்டர் மற்றும் தெலுங்கானா விலங்குகள் நல வாரியத்திற்கும் கடிதம் அனுப்பி, குதிரையின் மரணம் குறித்து விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. தலையில் காயம் ஏற்பட்டு குதிரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
நீர்ச்சத்தே இல்லை
இதற்கிடையில் குதிரையின் உரிமையாளரும், பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தொடர்ந்து குதிரையை ஷுட்டிங்கிற்காக பயன்படுத்தியதால் அது களைத்து போய், நீர்ச்சத்து இல்லாமல் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் பெயரும் சேர்ப்பு
படத்தின் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்ற முறையிலும் மணிரத்னத்தின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விலங்குகளை சினிமாக்களில் பயன்படுத்த ஏகப்பட்ட விதிகளை விதித்துள்ளனர். இதனால் தங்களுக்கு சிக்கல் வந்து விடக்கூடாது என்பதற்காகவே விலங்குகள் பயன்படுத்தப்படும் படங்களின் டைட்டில் ஸ்லைடில் எந்த ஒரு விலங்குகளையும் துன்புறுத்தவில்லை என்ற வாசகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
பொன்னியின் செல்வனுக்கு சிக்கல்
ஆனால் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ஷுட்டிங்கிலேயே குதிரை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் பூதாகரமாக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் பெரிதாகும் பட்சத்தில் பொன்னியின் செல்வன் படத்திற்கே சிக்கலாக அமையும் என்பதால் படக்குழுவினர் அச்சத்தில் உள்ளனர்.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்