Don't Miss!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- News சேலத்தில் மோடி.. அதிமுக சார்பில் பேசிய ஓ.பன்னீர் செல்வம்.. அழைப்பு விடுத்த கே.பி. ராமலிங்கம்
- Automobiles வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஒரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
தமிழக அரசு பேருந்தில் 'பேட்ட': ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி #StopPiracy
சென்னை: பேட்ட படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்போது தமிழக அரசு பேருந்தில் திருட்டு டிவிடி மூலம் காண்பிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பேட்ட படம் கடந்த 10ம் தேதி வெளியானது. படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவிலும் தொடர்ந்து நல்ல வசூல் செய்து வருகிறது.
|
பேட்ட
கரூரில் இருந்து சென்னை சென்ற தமிழக அரசு பேருந்தில் பேட்ட படத்தை திருட்டுத்தனமாக போட்டுக் காண்பித்ததை பார்த்த ரஜினி ரசிகர்கள் அது குறித்து சமூக வலைதளத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
|
விஷால்
ரஜினி ரசிகர்களின் புகார் ட்வீட்டை பார்த்த விஷால் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, பைரசி தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். அரசு பேருந்துகளில் திருட்டு டிவிடிகள் மூலம் படம் காண்பிக்கப்படுவதற்கான ஆதாரம் இதோ உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
|
ஆதாரம்
பேட்ட படத்தை திருட்டுத்தனமாக போட்டுக் காண்பித்த அரசு பேருந்தை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
திருட்டுத்தனம்
பேட்ட படம் ரிலீஸான சில மணிநேரங்களில் அதன் ஹெச்.டி. பிரிண்ட்டை வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். முதலில் தமிழ் ராக்கர்ஸை பிடிங்க அதன் பிறகு மற்றவர்கள் அடங்கி விடுவார்கள் என்கிறார்கள் நெட்டிசன்கள்.