Don't Miss!
- News பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
என்னாச்சு விஷால்... அவ்ளோதானா திருட்டு டிவிடி போராட்டம்?
குடிகாரன் பேச்சு...விடிஞ்சா போச்சுனு சொல்வாங்க... அந்த வரிசையில சினிமாகாரங்க பேச்சையும் சேர்த்துக்கலாம். மற்றவர்கள் விஷயத்தில் ஓகே... ஆனால் தங்கள் சொந்த பிரச்னைகளையே பேசுகிறார்கள். பின்னர் மறந்துவிடுவார்கள். அதில் முக்கியமானது திருட்டு டிவிடி விவகாரம்.
படம் ரிலீஸான சில நாட்களில், படத்தின் ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் கமிஷனர் அலுவலகத்தில் திருட்டு டிவிடிக்கு எதிராக புகார் கொடுப்பார்கள். இதனை சம்பிரதாயமாகவே வைத்துள்ளார்கள். அடுத்த சில நாட்களில் படத்தோடு சேர்ந்தே திருட்டு டிவிடி புகாரும் காணாமல்
போய்விடும்.
ஆக, இவர்களுக்கு நிரந்தர தீர்வு தேவையில்லை. திருட்டு டிவிடிக்கு எதிராக மருது விழாவில் அவ்வளவு ஆவேசமாக குரல் கொடுத்த விஷால் கூட அதன் பின்னர் இரண்டு இடங்களில் மனிதன் திருட்டு டிவிடியை பிடித்ததோடு சரி... பின்னர் ஆளைக் காணவில்லை.
ஒரு விஷயத்தைக் கையிலெடுத்துவிட்டால், அதற்கு தீர்வு காணும் வரை ஓயக் கூடாது. நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கைப்பற்ற தீயா வேலப் பாத்த மாதிரி, திருட்டு வீடியோவுக்கு எதிராகவும் வேலப் பார்க்க வேண்டாமா?