Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு கடன்ல நொந்து நூடுல்ஸ் ஆயிட்டீங்களா.. இதை ஃபாலோ பண்ணுங்க, வாழ்க்கையே மாறிடும்..!!
- Sports ஏமாற்றப்பட்டாரா விராட் கோலி.. அம்பயர் தந்த விளக்கம்.. தேவையே இல்லாமல் ஊதிய ஆர்சிபி
- News எல்ஐசி சூப்பர் பாலிசி.. ரூ.75 கட்டினால், ரூ.14 லட்சம்.. பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு பற்றி தெரியுமா
- Automobiles சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
- Technology பொசுக்குனு ஆர்டர்.. ரூ.7000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 2TB மெமரி.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க அவங்க வேலை செய்யுற இடத்தில் ராஜா மாதிரி இருப்பாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
ஆந்திர, தெலுங்கானா மக்களே முடிந்த அளவு உதவிகளை வழங்குங்கள்... நம்ம சென்னைக்காக - சமந்தா
ஹைதராபாத்: "ஆந்திர, தெலுங்கானா மக்களே உங்களால் முடிந்த அளவு உதவிகளை வழங்குங்கள் நம்ம சென்னைக்காக" என்று நடிகை சமந்தா தெலுங்கு மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சென்னை மற்றும் கடலூர் மக்களை மிகவும் வாட்டி வதைத்த கன மழையால் மக்களின் வாழ்வாதரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் சென்னை மக்களுக்கு தெலுங்கு நடிகர்கள் ஒன்றிணைந்து மக்களிடம் பொருட்களைத் திரட்டி பெரிய டிரக்குகள் மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்தப் பணியில் நடிகை சமந்தாவும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். 'மனமெட்ராஸ் கொசம்' என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களை நடிக, நடிகையர் திரட்டி வருகின்றனர்.
மக்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களை ராமநாயுடு ஸ்டுடியோவில் வந்து அளிக்குமாறு நடிகர்கள் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Sincerely request you guys to please donate as much as possible . #ManaMadrasKosam pic.twitter.com/QRsXsCES87
— Samantha Ruth Prabhu (@Samanthaprabhu2) December 6, 2015
இந்நிலையில் நடிகை சமந்தா "ஆந்திர, தெலுங்கானா மக்களே! உங்களிடம் உண்மையாக வேண்டிக் கொள்கிறேன். உங்களால் எவ்வளவு உதவிகளை வழங்க முடியுமோ அவ்வளவு உதவிகளை வழங்குங்கள் நம்ம சென்னைக்காக"
என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். சமந்தாவின் சொந்த ஊர் சென்னை பல்லாவரம் என்பது குறிப்பிடத்தக்கது.