Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நாட்டின் நலமே நமது நலம்.. கொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை தருகிறார் வைரமுத்து!
சென்னை: கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக தங்கள் திருமண மண்டபத்தை அரசுக்கு தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
உலகளவில் பெரும் தொற்று நோயாக உருவாகி இருக்கும் கொரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளின் பரவி உள்ளது. இதனால் இதுவரை உலகம் முழுக்க 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 114 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக தங்களின் திருமண மண்டபத்தை அரசுக்கு தருவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக எங்கள் திருமண மண்டபத்தை (பொன்மணி மாளிகை) அரசுக்கு ஒப்படைக்கிறேன் என்று முதலமைச்சருக்குக் கடந்த வாரம் கடிதம் எழுதியிருக்கிறேன். நாட்டின் நலமே நமது நலம் என பதிவிட்டுள்ளார்.
அந்த ஹீரோயினுடன் என்னை இணைத்து வந்த செய்திகள் உண்மைதான், ஆனால்.. பிரபல வில்லன் நடிகர் ஷாக் தகவல்!
ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் தன்னுடை வீட்டை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்தும் தங்களின் கல்லூரி மற்றும் கட்சி அலுவலகத்தை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனையாக மாற்றி கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.