Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- News விடாமல் விரட்டும் எல்நினோ தாக்குதல்.. சென்னையில் மழை வருமா? அப்டேட் வந்தாச்சு
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மத்தாப்பு பட நாயகன் மீது சொந்த ஊரில் போலீஸ் தாக்குதல்!
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நாலந்துலாகிராமத்தை சேர்ந்தவர் ஜெயன். இவர் தினந்தோறும் நாகராஜன் இயக்கும் மத்தாப்பு என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
நாலந்துலாகிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள அவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
தனது நண்பர்களை காரில் அழைத்து செல்வதற்காக திசையன்விளை பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றார். அப்போது அங்கு ரோந்து வந்த திசையன்விளை காவல்துறையினர் காரை அங்கிருந்து எடுக்குமாறு கூறியுள்ளனர்.
இது தொடர்பாக ஜெயனுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் ஜெயனை சரமாரி தாக்கி அவரது காரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விட்டனராம்.
இந்நிலையில் நேற்று ஜெயன் தன்னை காவல்துறை அதிகாரி தாக்கியதாக கூறி பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மேலும் ஜெயனின் தந்தை சுடலைக்கண்ராஜா தனது உறவினர்களுடன் இன்று நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு திரண்டு வந்து எஸ்.பி.யிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் திசையன்விளை ஏ.எஸ்.பி. வருண்குமார் எனது மகனை எந்தவித காரணமும் இல்லாமல் தாக்கியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஏ.எஸ்.பி. வருண்குமார் மீது ஏற்கெனவே பலதரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர். அப்பகு வியாபாரிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். இப்போது நடிகரைத் தாக்கிய வழக்கு மூலம் ஏஎஸ்பி சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.