Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
போலீஸ் அடித்து பி.வாசு டிரைவருக்கு சிறுநீரகம் சேதம்?

இது தொடர்பாக டிரைவர் பாஸ்கரன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான் திரைப்பட இயக்குநர் பி வாசுவின் கார் டிரைவர். சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி என்னை சாதாரண உடையோடு வந்த போலீசார் திடீரென்று தூக்கி ஜீப்பில் போட்டு கொண்டு சென்றனர். எனது கண்களையும் கட்டிவிட்டனர்.
போகும் வழியெல்லாம் என்னை அடித்து உதைத்து துன்புறுத்தினர். ஆள்கடத்தல், கொலை மற்றும் கொள்ளை வழக்கில் நான் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறினர். நெல்லை மாவட்டம் வள்ளியூருக்கு செல்லும் வழியில் என்னை அடித்து சில வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர்.
பின்னர் வள்ளியூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் என்னை போலீசார் ஆஜர்படுத்தினர். நான் வள்ளியூரில் துப்பாக்கியுடன் திரிந்ததாகவும், என்னுடன் மற்றொருவர் வெடிகுண்டுடன் இருந்ததாகவும் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் ரிமாண்டு செய்யப்பட்டு நான் சிறையில் அடைக்கப்பட்டேன். அங்கு ரத்த வாந்தி எடுத்தேன். எனவே என்னை சிறை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து என்னை நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனது சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறி, சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று 13.3.10 அன்று டிஸ்சார்ஜ் ஆனேன். எனக்கு காயம் ஏற்பட்டதற்கு முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் அருள், வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சூரியகுமார், போலீசார் சாகுல் அமீது, சீனிவாசன் ஆகியோர் தான் காரணம். இதுகுறித்து தமிழக அரசு, மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றுக்கு 23.3.10 அன்று புகார் கொடுத்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த விவகாரத்தை தகுந்த போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்..."
-இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார் டிரைவர் பாஸ்கரன்.
இந்த மனுவை நீதிபதி சி.டி.செல்வம் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில், "சிறையில் சேர்த்தபோதே பாஸ்கரனுக்கு காயம் இருந்துள்ளது. சிறை ஆவணங்களை பார்க்கும்போது இது தெரிகிறது. ஆனால் காயம் எப்படி, எங்கு, யாரால் ஏற்பட்டது என்பதையெல்லாம் விசாரித்தால்தான் தெரிய வரும்.
பாஸ்கரனின் புகாரை விசாரித்தால்தான் உண்மைகள் தெரிய வரும். எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும்..." என்று கூறினார்.