Don't Miss!
- News மாலையில் திடீரென வாக்குச்சாவடியில் குவிந்த 1000 பேர்.. மரக்காணம் அருகே பரபரப்பு.. என்ன நடந்தது!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
இரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்: கதறி அழுத காவ்யா மாதவன்
கொச்சி: நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் நடிகை காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தியபோது அவர் கதறி அழுதுள்ளார்.
பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்நிலையில் போலீசார் திலீப்பின் இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணை
காவ்யா மாதவனிடம் தொடர்ந்து 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் திருப்திகரமாக பதில் அளிக்கவில்லை என்று மலையாள செய்தி இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அழுகை
விசாரணையின் போது காவ்யா மாதவன் அழுதாராம். அவரிடம் முக்கியமாக இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கும் அவர் சரியாக பதில் சொல்லவில்லையாம்.
பல்சர் சுனி
நடிகை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி உங்கள் கடைக்கு ஏன் வந்தார்?, பாதிக்கப்பட்ட நடிகையுடனான உங்களின் நட்பு பகையாக மாறியது ஏன் என்று போலீசார் காவியாவிடம் கேட்டுள்ளார்கள்.
பணம்
பல்சர் சுனி காவ்யாவின் கடைக்கு இரண்டு முறை வந்ததற்கான சிசி டிவி வீடியோ ஆதாரம் போலீசிடம் உள்ளது. இந்நிலையில் பல்சர் சுனியை யாரென்றே தெரியாது என காவ்யா தெரிவித்துள்ளாராம்.