Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
அடித்துக் கொடுமைப்படுத்திய விவகாரம்... "முரட்டுக்காளை" ரதியின் கணவர் வாக்குமூலம்!
மும்பை : அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாக முரட்டுக்காளை புகழ் நடிகை ரதி கொடுத்த புகாரின் அடிப்படையில், அவரது கணவரை அழைத்து மும்பை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரதி அக்னிஹோத்ரி. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் நடித்த ரதி, பாலச்சந்தரின் 'ஏக் துஜே கே லியே' படம் மூலம் ஹிந்தியில் பிரபலமானார். முரட்டுக்காளை ரதிக்கு தமிழில் பிரபலத்தை அதிகரித்தது.
முன்னணி நடிகையாக வலம் வந்த போதே, கடந்த 1985ம் ஆண்டு அனில் விர்மானியை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார்.
போலீசில் புகார்...
திருமணமாகி 30 ஆண்டுகள் கழிந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் கணவர் விர்மானி, தினமும் தன்னை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்துவதாக, கண்ணீர் சிந்தியபடி, மும்பை போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார் ரதி.
விளக்கம்...
இதையடுத்து, விர்வானி மீது பல்வேறு வழக்குகளைப் போலீசார் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, விர்வானி நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தைப் போலீசாரிடம் அளித்தார்.
விசாரணை...
விர்வானி தரப்பு விளக்கம் தொடர்பாக தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். மேலும், ரதி வீட்டு வேலையாட்கள் நான்கு பேரிடமும் விசாரணை நடத்தப் பட்டுள்ளது.
காரணம்...
கட்டட வடிமைப்பு தொழிலில் ஏற்பட்ட இழப்பு தான், ரதி- விர்மானி இடையே பிரச்சினையை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
வழக்குப் பதிவு...
ரதி கொடுத்த புகாரின் பேரில் விர்வானி மீது ஒர்லி போலீஸார், திருமணமான பெண்ணை சித்திரவதை செய்வது, காயம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் தாக்குவது, குற்றச் சதி, குற்றச் செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.