TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
சிவாஜியை அறிமுகம் செய்தவருக்கு பொங்கல் சீர் கொடுத்த நடிகர் பிரபு
சென்னை: மறைந்த நடிகர் 'செவாலியே' சிவாஜியை சினிமாவில் அறிமுகம் செய்த பெருமாள் முதலியார் வீட்டுக்கு சீர்கொண்டு சென்றார் நடிகர் பிரபு
நேஷனல் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் உரிமையாளர் பெருமாள் முதலியார் தான் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். பராசக்தி திரைப்படத்தில் கருணாநிதி வசனத்தில் சிவாஜி நடித்த காட்சிகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.
தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமாள் முதலியார் வீட்டுக்கு, ஆண்டுதோறும் பொங்கல் சீர் கொண்டு செல்வது சிவாஜி கணேசனின் வழக்கமாக இருந்தது. தனது மனைவி கமலா மற்றும் குழந்தைகளுடன் சென்று சீர்வரிசை அளித்து பெருமாள் முதலியாரிடம் சிவாஜி ஆசி பெற்று வருவார்.

சிவாஜி கணேசன் மறைவை தொடர்ந்து அவரது மகன்கள் ராம்குமார், பிரபு ஆகியோர் இவ்வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, நடிகர் பிரபு, அவருடைய மனைவி புனிதா மற்றும் மகன் விக்ரம் பிரபு ஆகியோருடன் காட்பாடி காந்தி நகர் கிழக்குப் பகுதியில் உள்ள பெருமாள் முதலியார் வீட்டுக்கு சென்றனர். அவர்களை பெருமாள் முதலியார் மனைவி மீனாட்சியம்மாள் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். பிரபு குடும்பத்தினர் அளித்த சீர்வரிசையைப் பெற்றுக் கொண்ட மீனாட்சியம்மாள் அவர் களுக்கு பொங்கல் பரிசு அளித்து ஆசி அளித்தார்.