Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் பொன்னியின் செல்வன்… 4 படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு…?
சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியான பொன்னியின் செல்வனுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பொன்னியின் செல்வனுக்கு கிடைத்துள்ள சிறப்பான வரவேற்பால் 4 படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம்
என்ன
கிழிச்சிருவாருன்னு
பாக்க
போனேன்...
பார்த்திபன்
பளிச்
பேட்டி

மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன், எம்ஜிஆர் முதல் கலம்ஹாசன் வரை பல ஜாம்பவான்களின் கனவுப் படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தை மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளில் சென்று பார்த்து வருகின்றனர். மேலும், ரஜினி, கமல், இயக்குநர் ஷங்கர் போன்ற பிரபலங்களும் பொன்னியின் செல்வன் படத்தை பாராட்டி வருகின்றனர்.

பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதால், சினிமா ரசிகர்கள், இலக்கிய வாசகர்கள் என அனைவரும் பொன்னியின் செல்வனுக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர். இதனால், இந்தப் படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ரசிகர்களும் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். பொன்னியின் செல்வன் வெளியாகி இதுவரை 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தள்ளிப் போகும் படங்கள்
பொன்னியின் செல்வன் படத்துக்கு ரசிகர்களிடம் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக காணப்படுகிறது. இதனால், இந்தவாரம் வெளியாக இருந்த 4 திரைப்படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சுந்தர் சி இயக்கியுள்ள 'காஃபி வித் காதல்' அக்டோபர் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் வெற்றியால் இப்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்டர் ரிலீஸ் தேதி மாற்றம்
அதேபோல், அருண் விஜய் நடித்துள்ள 'பார்டர்' படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் அக்டோபர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், காசேதான் கடவுளடா, அரவிந்த் சாமி நடித்துள்ள 'சதுரங்க வேட்டை 2' ஆகிய படங்களும் ரிலீஸில் இருந்து பின்வாங்கியுள்ளன. பொன்னியின் செல்வன் படத்துக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி ஆரோக்கியமானதாக இருந்தாலும், அதனால் சின்ன பட்ஜெட் படங்களின் ரிலீஸ் மாற்றப்படுவது வேதனையானது என சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.