Don't Miss!
- Education நவீனம் பெறும் அரசு பள்ளிகள்...ஏப். 1 முதல் ஸ்மார்ட்போர்டுகள் விநியோகம்...!!
- Automobiles குறைவான விலையில் ஏஎம்டி காரை வாங்கணுமா? இதோ டாடா நெக்ஸான் மாடலில் புதிய மலிவு விலை ஏஎம்டி தேர்வுகள் அறிமுகம்!
- Travel IRCTC செயலி மற்றும் இணையத்தளத்தில் டிக்கெட் ரத்து செய்வது எப்படி – ரத்து கட்டணங்கள் எவ்வளவு?
- Lifestyle இந்த 5 ராசி பெண்கள் மற்றவர்களை விட ரொம்ப ஆணவம் பிடித்தவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க...!
- News தீவிரமாக பாஜகவை விமர்சித்த சினேகன்.. பிரசார வாகனத்தில் நின்று மனைவி கன்னிகா செய்ததை பாருங்க! அடடா
- Technology இவனுங்க கொடுக்குற மென்டல் டார்ச்சர்ல.. Elon Musk-ன் 2 முக்கிய அறிவிப்புகள்.. நொந்து போன சுந்தர்!
- Finance டிராக்டர் விற்பனையை மூடும் Force Motors.. ஏன் இந்த திடீர் முடிவு..?!
- Sports அஸ்வின் சொன்னது சரி.. இந்த பையன் வேற லெவல் ஃபார்மில் இருக்கான்.. ஆர்சிபி அணியில் இளம் வீரர் அசத்தல்!
வெய்ட்டிங்கிலேயே வெறி ஏறுதே...நாளை பொன்னியின் செல்வன் இசை பயணம் ஆரம்பம்
சென்னை : டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக இயக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் மோஷன் போஸ்டர், கேரக்டர் அறிமுக போஸ்டர்கள் ஆகியன வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து சென்னையில் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
படம் பற்றி வெளியாகும் ஒவ்வொரு தகவலும் அனைவருக்கும் ஆர்வத்தை தூண்டி வருகிறது.படத்தின் ரிலீசிற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள், இந்த காட்சிகளை எப்படி படமாக்கி இருப்பார்கள் என்பதை திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.
பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல்.. கனவுகளை துரத்தும் வெற்றிநாயகன்.. ட்ரெண்டிங்கில் அஜித்!
நாளை ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்
இந்த சமயத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஜுலை 31 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக சமீபத்தில் புதிய போஸ்டருடன் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பொன்னி நதி என ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வந்தியத்தேவன் ரோலில் நடித்துள்ள கார்த்தி, தஞ்சைக்கு வரும் போது நடக்கும் ஆடித்திருநாள் கொண்டாட்ட பாடலாக இது அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஃபர்ஸ்ட் சிங்கிளை பாடியது இவரா
இந்நிலையில் இன்று மற்றொரு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், அந்திவான சூரியனின் பின்புலத்தில் குதிரை மீது ஒரு வீரன் அமர்ந்திருப்பது போலவும், அவன் நதிக்கரையில் பயணிப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. வந்தியத்தேவனுடன் ஆடித்திருநாள் கொண்டாட்டம் பொன்னி நதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தான் இன்ட்ரோ சாங்
நாளை மாலை 6 மணிக்கு பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடலை, அவரே பாடி உள்ளார். இளங்கோ கிருஷ்ணன் இந்த பாடலை பாடி உள்ளார்.வந்தியத்தேவன் தஞ்சைக்கு வரும் சமயத்தில் பொன்னி நதி(தற்போதைய காவிரி ஆறு) கரையில் மக்கள் ஆடிப்பெருக்கு நாளை கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். அந்த அழகை கண்டு ரசித்தபடி வந்தியத் தேவன் குதிரையில் பயணிப்பான். இது தான் படத்தின் இன்ட்ரோ சாங்காகவும், வந்தியத் தேவனின் இன்ட்ரோ சாங்காகவும் இருக்கும் என தெரிகிறது.
இதுக்கும் விழா நடக்குதா
நாளை மாலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ ஹாலில் பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த விழாவில் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதே சமயம் இன்று மாலை ஃபர்ஸ்ட் சிங்கிளிற்கான க்ளிம்ப்ஸ் வெளியிடப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
டிரெண்டிங்கில் தெறிக்குதே
பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியிடப்பட உள்ள தகவலை ரசிகர்கள் இப்போதே கொண்டாட துவங்கி விட்டனர். ட்விட்டரில் #PonniyinSelvan என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதில் விக்ரம், த்ரிஷா பற்றிய தகவல்களை வெளியிடுமாறு ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.
-
கேமரா மேனால் குழந்தையோடு தெருவில் நின்றேன்.. வாழ்க்கையே போச்சு..டான்சர் விஜயலட்சுமி கண்ணீர் பேட்டி!
-
மண்டைமேல இருக்க கொண்டையை மறைங்க பாஸ்.. வாரிசு நடிகையால் வந்த வினை.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குநர்?
-
சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!