Don't Miss!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- News "உயிரை பறித்த விபரீத விளையாட்டு.." ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்!
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
’இணையத்தில் வெளியானால் பெரிய நஷ்டம் வரும்’..பொன்னியின் செல்வன் குழு வழக்கு..உயர் நீதிமன்றம் உத்தரவு
பொன்னியின் செல்வன் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2405-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் படத்தை முறைகேடாக வெளியிடுவதை தடுக்க இணைய தள சேவை நிறுவனங்கள் தடுக்கக் கோரி லைகா வழக்கு
நாளை படம் வெளியாக உள்ள நிலையில் லைகா பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன்.. கல்கியின் பேத்தி சொல்லும் சுவாரஸ்யம்!
நவீன வரவுகள் திரைத்துறைக்கு சாதகம்-பாதகம்
தமிழ் திரையுலகில் மாற்றங்கள் வந்த அதே நேரம், டெக்னாலஜியின் வளர்ச்சியும் அதிகரித்தது. 90 களில் இணைய சேவை அறிமுகமான போது அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதன் பின புதிய டெக்னாலஜியை திரையுலகினரும் பயன்படுத்தினர். பிலிம் ரோல் போய் டிஜிட்டல் கேமராக்கள், கிளவுட் என தொழில்நுட்பம் வளர்ந்தது. டேப்கள் ஒழிந்து சிடிக்கள் வெளியான பின் படம் வெளியாகும்போதே அதன் திருட்டு சிடிக்கள் உடனடியாக பிரிண்ட் செய்யப்பட்டு வெளிவந்தது. வெளிநாட்டு உரிமை விற்கும்போது அங்கிருந்து மாஸ்டர் பிரிண்ட் போட்டு அதை லட்சக்கணக்கில் பிரிண்ட் போட்டு விற்றார்கள்.
காணாமல் போன தமிழ் ராக்கர்ஸ்
இணையதள குற்றங்கள் பெருக பெருக வீடியோ பைரசி அதிகரித்தது. பின்னர் என்னதான் திரையுலகினர் உஷாராக இருந்தாலும் இணையதளம் மூலம் படம் வெளியானது. திடீரென தமிழ் ராக்கர்ஸ் உருவாகி புதிய படங்களை இணையதளத்தில் வெளியிட்டனர். இதனால் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது பாதிக்கப்பட்டது. சைபர் பிரிவு போலீஸ் நீதிமன்றங்கள் தலையீட்டின் பேரில் பலர் சிக்கினர். பின்னர் வெளியிடும் இணையதளங்கள் பட்டியலிடப்பட்டன. தமிழ் ராக்கர்ஸும் விலகி காணாமல் போனார்கள். ஆனாலும் படம் வெளியாகும் சில நாட்களில் இன்ஸ்டாகிராம் மூலம் பட லிங்குகள் ஷேர் செய்யப்படுவது தொடரத்தான் செய்கிறது.
புதிய பட வெளியீட்டின் போது தொடரப்படும் வழக்குகள்
ஆனாலும் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் உயர் நீதிமன்றதில் பட்டியலிடப்பட்ட இணையதளங்களில் படத்தை வெளியிட முறைப்படி தடைக்கேட்டு திரைத்துறையினர் வழக்கு தொடுப்பார்கள். நீதிமன்றமும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து தடை விதித்து உத்தரவிடும். இதன்மூலம் வீடியோ பைரசி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தவறுகளை செய்ய அஞ்சும் நிலை ஏற்படும். இந்நிலயில் லைகா பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் - முதல் பாகம் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தை இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
பெருத்த நஷ்டத்தை சந்திப்போம்- லைகா நிறுவனம் வாதம்
இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, "மிகுந்த பொருட்செலவில், இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் படத்தை வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். இதனால், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும், எனவே சட்டவிரோத வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சட்டவிரோதமாக இணையதளங்களில் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.