Don't Miss!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அமரர் கல்கியின் 123வது பிறந்தநாள்… பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட அல்டிமேட் வீடியோ
சென்னை: கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க நிறையபேர் முயற்சி செய்தனர்.
இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், கல்கியின் பிறந்தநாளை முன்னிட்டு பொன்னியின் செல்வன் படக்குழுவினர் சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
பைலட்டாக மாற வேண்டிய முரளியை கார்த்திக்காக மாற்றிய பாரதிராஜா... நவரச நாயகனை காதலித்த 3 ஹீரோயின்ஸ்
கனவு நனவான தருணம்
தமிழ் இலக்கிய உலகில் கொண்டாடப்படும் படைப்புகளில் ஒன்று கல்கியின் எழுத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' நாவல். 1951 முதல் 1954 வரை ஒவ்வொரு பாகங்களாக வெளிவந்த இந்த நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என எம்ஜிஆர், கமல் உள்ளிட்ட பலரும் முயற்சித்தனர். மணிரத்னமும் தொடர்ந்து முயன்று வந்த நிலையில், தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. மல்டி ஸ்டார் திரைப்படமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன், வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கல்கிக்கு நன்றி சொன்ன மணிரத்னம்
சோழர்களின் வரலாற்றை பின்னனியாகக் கொண்டு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில், பாத்திரங்களின் வடிவமைப்பும் விவரிப்பும் அற்புதமாக இருக்கும் என வாசகர்கள் புகழ்வதுண்டு. இந்நிலையில், கடந்த 6ம் தேதி சென்னையில் பொன்னியின் செல்வன் ஆடியோ, ட்ரெய்லர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில், சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் மேடையேறிய இயக்குநர் மணிரத்னம், முதலில் கல்கிக்கு நன்றி கூறிய பின்னரே தனது பேச்சைத் தொடங்கினார்.
கல்கியின் 123வது பிறந்தநாள்
இந்த நிலையில், அமரர் கல்கியின் 123வது பிறந்தநாள் நேற்று கொண்டாப்பட்டது. சிவகாமியின் செல்வன், பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் என வரலாற்று புதினங்களை எழுதியுள்ள கல்கி, ஏராளமான நாவல்களையும், 75க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். தமிழ் இலக்கியவுலகில் அதிகம் கொண்டாடப்படும் கல்கியின் படைப்புகள் அனைத்தும் நாட்டுமையாக்கப்பட்டதால், அவரது படைப்புகள் எளிதாக கிடைக்கின்றன
சிறப்பு வீடியோவுடன் வாழ்த்து
இதனிடையே கல்கியின் 123வது பிறந்தநாளை முன்னிட்டு, பொன்னியின் படக்குழு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், எழுத்தாளகள் கெளரி ராமநாராயணன், பாரதி பாஸ்கர், கார்த்திகேயன், பாம்பே கண்ணன் ஆகியோ, கல்கியின் எழுத்தையும் பொன்னியின் செல்வன் நாவலையும் பற்றி விவரித்து பேசியுள்ளனர். பொன்னியின் செல்வன் படக்க்ழு வெளியிட்ட இந்த வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.