Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நடிகர் சங்க அறக்கட்டளைப் பணம் ரூ 1.65 கோடி கையாடல்!- சரத்குமார் மீது பூச்சி குற்றச்சாட்டு
நடிகர் சங்த்தின் அறக்கட்டளையிலிருந்து ரூ 1.65 கோடியை முன்னாள் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் கையாடல் செய்ததாக பூச்சி முருகன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறிக்கு பூச்சி முருகன் கூறுகையில், "நடிகர் சங்கம் தேர்தல் முடிந்து ஐந்து மாதமாகிவிட்டது. சங்கத்தின் கணக்கு வழக்குகளை ஒப்படைக்கச் சொல்லி முன்னாள் தலைவர் சரத்குமாருக்கு நான்கு முறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஒப்படைக்கவில்லை.
பலரிடமும் கணக்கு வழக்குகளை ஒப்படைத்துவிட்டேன் என பொய்யான தகவலை கூறி வருகிறார் சரத்குமார்.
சங்கத்தில் இரண்டு விதமான கணக்குகள் பரமாரிக்கப்பட்டு வருகின்றன. ஒன்று அறக்கட்டளை கணக்கு, மற்றொன்று சங்க கணக்கு.
தற்போது, அறக்கட்டளையில் உள்ள முறைகேடுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், 252 பக்க அளவிற்கு கணக்கு வழக்கு பைல் பண்ணி ஆடிட்டர் கொடுத்துள்ளார். அதில் பல பொய்யான தகவல்கள், மொத்தமாக பணம் கையாடல், போலியான ரசீதுகள் என பல முறைகேடுகள் நடந்துள்ளது. சுமார் ரூ.1.65 கோடிக்கு மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை எங்கள் குழுவினரோடு புகாராக கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். விஷால் பொதுச்செயலாளர் என்பதால் அவரிடம் கையெழுத்து வாங்கி, அறக்கட்டளையின் உறுப்பினர் நான் என்பதால் கமிஷனரிடம் சென்று சரத்குமார் மீது புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளோம்.
இது ஏழைகளின் பணம், நடிகர்கள் வியர்வை சிந்தி சம்பாதித்த பணம், எனவே உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை," என்றார்.